Monday, May 11, 2009

தி.நகர் Bus Stand மிகவும் பரபரப்பாக ரத்தத்தின் ரத்தங்களின் தாயை அன்னையர் தினத்தில் வரவேற்க அங்குமிங்கும் அலைந்தவண்ணம் இருந்தது. அப்போதும், ரங்கநாதன் தெருவில் மக்கள் சளைக்காமல் signal-களை மதிக்காமல் சென்று கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு நாள் காலை, அந்தத் தெருவின் இருபுறங்களும் கட்டிடங்களே இல்லாமல் வெறுமையாய் இருந்தால்....

நேற்று, நீண்ட நாட்களுக்குப் பிறகு B.T. இரங்கராஜனுடன் கச்சேரிக்குச் சென்றேன்.
Election meeting என்று எங்கும் தொண்டர்கள் "தெளிவாக" அலைந்து கொண்டிருப்பதால், முன்னதாகச் சென்றிருந்தோம். அமைந்தகரை ஏகாம்ரேஸ்வரர் கோயிலில் கச்சேரி.



அதில் சட்டென்று எம்.எஸ் .சுப்புலக்ஷ்மியின் குரலில் விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிபெருக்கியின் வழியே எங்களை ஆச்சிரியப்படுத்தியது.

பார்த்தால்
, சிவ சிவ என்ற கோபுர வாசல் வழியே, சன்னிதானத்தின் பின்சுவற்றுக்கு மிக அருகில், பெரியதொரு கோபுரம்-அதில் அழகிய நாமம்.

சட்டென்று ஒரு பார்வைக்கு, கோயிலின் ஒரு புறம் சிவனும் மறுபுறம் விஷ்ணுவுமாக சைவ-வைணவ அபேதம் சித்தியாகிவிட்டதைப் போன்றிருந்தது. இந்தக் கோவிலின் மதில்சுவருக்கு அப்பால் சின்ன தெரு, அதன் அக்கரையில் பெருமாள்
கோவில். அங்கிருந்துதான் சர்வதர்சீ விமுக்தாத்மா...


This time, there were two ramps on the sides of the entrance,
just like the two elevated platforms one can see in service centers for car wash. But, they were not broader enough to use the wheel chair. They have been designed to fit the wheels of the temple chariot. The temple guy said that they have wooden plates to fill the gap, but, they were used to set the stage for the concert!


இதீதம் கீர்த்தனீயஸ்ய என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, இங்கிருந்து பெருங்குரலில், ஹர ஹரசிவனே.. அண்ணாமலையே.. ஹர ஓம் நமசிவாய... என்று எஸ்.பி.பாலு commenced his account for the evening. "சார்.. இந்தப் பாட்டும் அந்த "ஸ்ரீ வேங்கடேசம் மனசா ஸ்மராமி" ரெண்டும் ஆரம்பிச்சா முடியவே முடியாது" என்று en (erode nagaragj!) சிஷ்யன் கிஷ்ண பிரசாத் சொன்னான்.

"கிருஷ்ணா, ஏய்... ஓராயிரம்-னு ஒரு பாட்டு இருக்கு கேட்டிருக்கியோ..."

இல்ல சார்...

"மீண்டும் கோகிலால வரும்", பாடிக் காண்பித்தேன். "அத நாங்க, ஏய்... ஓராயிரம்.. ஏய்... ரெண்டாயிரம்... ஏய்... மூவாயிரம்னு நிறுத்தாம பாடி ப்ராணன வாங்குவோம் எங்க class-ல. அது மாதிரி இந்தப் பாட்டெல்லாம்... முடியாது..."

நாங்கள்
பிராகாரத்தை சுற்றி மறுபக்கம் போனோம். ஒலிபெருக்கிகளின் நேர் பார்வை மறைந்ததால், சப்தம் குறைந்திருந்தது.

இரண்டு தெருக்கள் தள்ளி, ஜெயலலிதா தேர்தல் பொதுக்கூட்டம். சிவன்கோயிலும் பிரச்சாரமும் சேர்ந்து பார்க்கும் போது, "மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே" என்று ஞாபகம் வந்தது!

"ஹும்... பக்கத்துல இத வேற வெச்சுண்டு எப்படி தான் கச்சேரி பண்றதோ" said the vocalist.

"கவலைப்படாதே... அங்க கை தட்டினா உன் பாட்டுக்கு தானோன்னு நெனச்சுப்பா, வெளீலேந்து கேக்கறவா எல்லாம்"

"கிண்டல் பண்ணாதீங்கோ..."

"ச்சே..ச்சே.. உன்ன கிண்டல் பண்ணல.. ஒரு நாளானும் அவா எல்லாம் நல்லவிஷயத்துக்கு கை தட்டினதா இருக்கட்டுமே" என்றேன்.

No comments:

Post a Comment