Friday, April 24, 2009

காதிலே பூவும் கொஞ்சாத புறாவும்...


புறாக்களின் நகர்தலால் புலால் உண்ணும் காகங்கள்
புலம் பெயரும்; புதிதாய்க் குடிவரும்,
அலகுகளை அகலத் திறக்கும்.

அழைப்பதற்கு என்றெண்ணுகையில்,
அஞ்சுவதால் அலறி அலறி
கூட்டம் சேர்க்கும்; கூடும் கட்டி அமரும்.

மாண்டு விட்ட கணவர்களை
'மதம்' கொண்டு மறந்து போகும்,
மன்னிப்பென்று மழுப்பிவிட்டு
நளினமாய் சிறை மீட்கும்.

மைனாக்கள் வருகுதென்று
மைதுனிக்கும் மனங்களூடே,
அந்தோ! நீயோ..! மைனாவோ...?!!
என்று புறாக்கள் கிளம்பிவிடும்.

கடைசி முறையாய் கரம் பற்றி விடைகொடுக்கும்.

உலகம் நம்மைச் சுற்றி விரையும்;விரியும்...
பந்தயத்திற்காய் பறக்கவிடினும்
பரவாயில்லை திரும்ப வரும்
பாவம் மெகாக்கள்...

இல்லையில்லை, புறாக்கள்.

(photo courtesy: idli vadai)


Wednesday, April 22, 2009

திருவனந்தபுரமும் பெங்களூருவும்... 5



பெங்களூரு கச்சேரிக்காக லால் பாக் ரயிலில் ஏறியதும் தான் அது ஒரு town bus of the peak hour என்று தெரிந்தது. இருவர் அமரும் இடத்தில் மூவர். ஜன்னல் ஓர இருக்கை. பக்கத்தில் ஸௌம்யஹரிணி. அதையடுத்து இன்னொருவர். பெரும்பான்மை சமயங்களில் நின்று கொண்டு வந்தார்; "காத்து வேணும் சார்"

நாங்கள் இருவரும் அவரவர் மொபைல் போன்களின் திரையில் எங்களைச் சற்று நேரம் தொலைத்தபின், வினோதமான ring tones ஐப் பெற்றுக்கொண்டேன், அவளிடமிருந்து.

"நான்சென்ஸ் மாதிரி பேசாதீங்க", என்று ஒரு குரல். TNS ஒரு முறை, நங்கநல்லூரில் பாடியபோது.. main முடிந்ததும் பேச வந்த பிரகிருதி (secretary) சேஷுவை விடுத்து, "நேத்து இங்க சுதா பாடினபோது நல்ல கூட்டம்" என்று சம்பந்தமில்லாமல் அரற்றியதில் கடுப்பாகி, பேச்சு முடிந்ததும், "ஸாரமைன மாட்டலேந்து சாலு சாலுரா... " என்று தொடர்ந்தார்.... (அந்த கச்சேரியில் தான் "பரமாத்முடு - ஜீவாத்முடு என்று நிரவல். பரமாத்முடு என்ற வார்த்தையை மேல் ஷட்ஜத்தில் [higher octave] வைத்து, ஜீவாத்முடு என்ற வார்த்தையை சா... ரீ...கா... ஒவ்வொரு ஸ்வரமாகத் தூக்கி பரமாத்மாவிடம் சேர்த்தார் என்று நினைவு...) இந்த ring tone ம் அப்படித்தான் உபயோகமாகும் போலிருந்தது.

இன்னொரு டோனில், "ஐயோ... இந்த போன் கத்தீண்டே இருக்கே, யாராவது அதுங் கழுத்தப்புடிச்சு அமுக்குங்களேன்" என்று ஒரு குழந்தை ஹிந்தியில் சொல்லியது... அபஸ்வரமாக ஏதேனும் நடக்கும்போது, இந்த tone சுஸ்வரமாக ஒலிக்கக் கூடும்!

சிறு வயதில், தீப்பெட்டி படங்களை, தபால்தலைகளை, தீபாவளிக்கு வாங்
கிய பட்டாசுகளை ஒருவருக்கு ஒருவர் காட்டி மகிழ்ச்சியோ எரிச்சலோ படுவதையே தான், ஈ லோகத்தில் (e-world) வேறு விதமாய் செய்துகொண்டிருந்தோம்.

ஸௌம்யஹரிணி, மடிக்கணினி (என்ன ஒரு எகன-மொகன) கொண்டுவந்திருந்தாள். Administrator password போட்டு, user account-ஐ அணுகாதபடி வைத்திருப்பதால், என்னுடைய desk top-ம் “மடி”-கணினி தானோ என்றால், எப்போதாவது ட்ரம்ஸ் முரளி ஈ மயிலில் அனுப்பும் அனாச்சாரமான படங்களால் அப்படி இல்லை எனத் தோன்றியது. குறுக்கும் நெடுக்கும் நடந்து, dvd விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் jurassic park-123, baal ganesh, hanuman, krishna மற்றும் african wild animals வாங்கினேன், குழந்தை உள்ளத்துடன்,சமர்த்தாக; ஸௌம்யஹரிணியும்.

உடனடியாக laptop-ல் சோதித்ததில், ஓடாத ஒரு cd-ஐ, சௌமி சென்று மாற்றி வந்தாள். "கொஞ்ச நேரத்துல, குப்பம் station வந்துரும்... இந்த மாதிரி விக்கறவங்க ஏறங்கீடுவாங்க...சீக்கிரம் போனீங்கன்னா, மாத்தீடலாம்" என்ற அசரீரி, அவள் காதுகளுக்கு அருகில் காற்றில் கரைந்தது.

ஸௌம்யஹரிணியுடன் பேசிக்கொண்டே சென்றதில் வழியில் ஸ்டேஷன்கள் மறைந்து கொண்டிருந்தன.

பெங்களூர் இரயில் நிலையத்தில், மிக அருகில் ஏறக்குறைய எதிரிலேயே இருந்த cabs driver-ஐ செல் போனில் பேசிக்கொண்டே பரஸ்பரம் தேடியதில் 15 நிமிடங்கள் கழிந்து, classic comfort-ஐ அடைந்தோம். இரண்டு படுக்கைகள், குளிர் சாதனம், நவீன குளியலறை என்று ரம்யமாகத்தான் இருந்தது, ஒரு நாள் வாடகை ரூ.2500.

இரண்டு நாட்கள் மூன்று அறைகள். "அடப்பாவி, அதையும் பணமா கையில வாங்கீண்டு நம்மாத்துல இருந்திருக்கலாமே" - கோபால கிருஷ்ணன். ந்யாயம் தான்.கச்சேரிக்கு சம்பாவனை ரூ.1200 மட்டுமே. நான் தங்கி உணவருந்தியது ரூ.5500! ஆனால், இந்த விஷயங்களை நான் தீர்மானிக்க முடியாது...

மிக மிக வசதியான அறைகளில் தூக்கம் வருவதற்குள் வீடு வந்து விடுகிறது.

காலை தயாராகிக் குளியலறையிலிருந்து வந்ததும், கலைந்து களேபரமாகக்
கிடந்த கட்டிலை தாற்காலிகமாக விவாகரத்து செய்தேன், இன்னொரு கட்டில் இருந்ததால்.

"மாதொருபாகன் மாசில் ஆலயத்தில், நானொரு பாகன் நடக்காமல் போகிறேன்..." என்று ஒரு வரி உள்ளே ஓடியது. ஒரு விதத்தில் உண்மை தான். யானையின் காலில் காலூன்றி, அதன் காதைப் பிடித்திழுத்தே மேலேறும் பாகன் போலத்தான் நான் நேற்று கட்டிலில் ஏறியதும் இறங்கியதும்.

கலைச்சேவை என்பதை "கலைச்சே-வை" என்று ஆக்கிவிட்டேன்.

ரூம் boy-ஐக் (bengali) கூப்பிட்டு சரியாகப் போடச்சொன்னதில், புதுப் படுக்கை
யுடன் உள்ளே வந்து, படுக்கையையும் என்னையும் விஷமமாகப் பார்த்தான். ஜன்னலுக்கு வெளியே, பெருகிவிட்ட போக்குவரத்தில் அரை மணிக்கு ஒரு முறை சகஜமாக ஸ்தம்பித்தபடி கனகபுராவின் சாலைகள்... எங்கெங்கும் உயர்ந்து வரும் விண் தீற்றிகள்... [sky scrappers?]

(என் ஜன்னலுக்கு வெளியே அருகிலிருந்த ஒரு விண் தீற்றி )



காலையிலேயே கார் வந்து,
ஸௌம்யஹரிணி பூஜைக்குப் போயிருந்தாள். யாக சாலைப் பூஜைகள் பாடுவோர்க்குச் சிரமம். அவள் வந்ததும், ஸ்ருதியை சேர்த்துப் பார்த்தேன். நாட்டைக் குறிஞ்சியில் ஒரு தமிழ் வர்ணம் பாடினாள். மூச்சு விடும் இடங்களில் நெடில் பிரயோகங்கள் குறிலாவதைச் சொன்னேன்.

மாலை கச்சேரிக்கு, டாடா சுமோவில் ஏறுவதற்கு பட்ட சிரமங்கள் எனக்குச் சொல்லத்தெரியவில்லை என்று தான் எளிமையாகச் சொல்லமுடியும். அதன் பின்புறக்கதவைத் திறந்து எளிதில் ஏறலாம் என்றே எண்ணியிருந்தேன். ஆனால், கால் வைத்து ஏறுவதற்கு வைத்திருந்தந்த அமைப்பு, அந்த வண்டியின் பின்னால் உள்ளடங்கி இருந்தது. பாதங்கள் நுழைந்து பொருந்திக்கொள்ளும்;முட்டி? முட்டி மோதி என்றால் என்ன என்பதை அறிந்துகொண்டேன் :)...

BTM Layout-ன் பெரியதொரு மைதானத்தின் செப்பனிடாத பரப்பில் ஷாமியானா. கடவுளை தரிசிப்பதோ, அடைவதோ மிகக் கடினம் என்பதை மீண்டும் உணர்ந்தேன். கோவில் கச்சேரிகள் என்றுமே எனக்கு nightmare தான். ஜனவரி 18 வாக்கில் முடிந்திருக்க வேண்டிய கும்பாபிஷேகம் மூன்று மாத தாமதத்திற்குப் பின்னும் பல வேலைகள் மீதமிருக்க, 30 அடி உயர சிவன் முத்தமிடக் காத்திருப்பது போல் குவிந்த உதடுகளுடன் அசிரத்தையாய் அமைக்கப்பட்டிருந்தார். அதற்கு வண்ணங்களை வாரியிறைத்து வம்பு பண்ணியிருந்தார்கள்.

மேடை, "anytime you may die" என்று மௌனமாய், அதன் ஏற்றக்குறைச்சல்களால் செய்தியனுப்பிக்கொண்டிருந்தது. ஐந்து கட்டையில் கச்சேரி நடந்துகொண்டிருக்கும்போது, ஊர்வலம் செல்ல வேண்டி, தவிலின் ஆர்ப்பரிப்புகளுக்கிடையில் இரண்டு கட்டையில் நாதஸ்வரம் முழங்கியது. கிட்டத்தட்ட ஒரு கல்யாணக் கச்சேரிதான் அது. ஆர்குட் நண்பரான ஸ்ரீவத்சா பிரம்மா வந்திருந்தார். முடிந்தால் முன்பே வருகிறேன் என்று சொல்லியிருந்த கோபாலகிருஷ்ணன், முடியுமுன்பே வந்துவிட்டான். . (PIN)

கோர்மங்களா செல்லும் வரைதான் அவனுடன் பேச முடிந்தது. அதற்கு பிறகு, காரிலிருந்து இறங்கிய வினாடியிலிருந்து நாலு வயது ஸ்ரீ வர்ஷினி என்னை ஆக்ரமித்துக்கொண்டாள். அவள் பிறந்தவுடன் தேதி பார்த்து , மாதுவுடன் கலந்து பேசி பெயர் வைத்த தருணங்கள் தோன்றின. ( ரமணன் பெண்ணிற்கு பாரதி, ரங்கராஜனின் பெண்ணிற்கு ஸ்ரீமதி என்று மாது தான் "neumorology" படி பெயர் சொன்னான்... அனேகமாக இந்த வரியால் blog-ல் மீண்டும் சூடு கிளம்புமோ என்றொரு ஆசை ). நானும் அவளும், கொஞ்சல்களையும் கதைகளையும் முடித்துத் உறங்கச் சென்ற போது, இரண்டு மணியாயிருந்தது.

அடுத்த நாள், பத்தரைக்கு அறையை அடைந்து மாலை வரை வரை சும்மா இருந்தேன்.
ஸௌம்யஹரிணியை escort-ஆகப் போட்டு டிக்கெட் வாங்கியிருந்ததால், அவள் திரும்பும் போதுதான் நானும். ஸ்ரீ வத்சா பிரம்மா வந்ததும் அந்த மாலை ச்வாரச்யமாகப் போயிற்று. அவனுக்கு நல்ல சம்ஸ்க்ருத ஞானம், அதோடு, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், தமிழ் என பல பாஷைகள் தெரியும். இரவு, station-க்கும் வந்தது மிகவும் உதவியாக இருந்தது.

ஸௌம்யஹரிணி சற்று அவள் அறைக்குச் சென்ற பொழுதுகளில், மைசூர் அரண்மனையில் வாசலில் நிறுத்தப்பட்ட புலவன் எழுதிய கவிதையைச் சொன்னான். "மன்னன் அரண்மனை தொழிலில் இருக்கும் பெண்ணின் உறுப்பைப் போன்று இருக்கிறது... பணம் கொடுத்தால் உள்ளே அனுமதிக்கும் காவலர்களை கவனித்து பல dicks உள்ளே செல்ல, நான் மட்டும் கொட்டைகள் போல் கோட்டை வாயிலிலேயே...."

"this is too much.... I never wish someone calling me an outstanding artiste here after", என்றேன்.

பிறகு சீரியஸாக கவிதை, அஷ்டாவதானம், சதாவதானம் போன்றவைகள் பற்றிப் பேசினோம். sms-லும் தொடர்ந்தது, இரயில் கிளம்பிய பின்னும்.

Banglore would have become a dot in the distance. I slept without realising it, but enjoying new dots becoming bigger inside my closed eyes...

Saturday, April 18, 2009

திருவனந்தபுரமும் பெங்களூருவும்... 4


த்ருப்தி என்பது அடைதல் - எண்ணியது எண்ணாதது இரண்டையும்.

எண்ணாததை அடைந்தால் திருப்தியா? ஆம் என்றுதான் நினைக்கிறேன்.

இன்ப அதிர்ச்சி என்றோ அதிருப்தி என்றோ அதைத்தான் கூறுகிறோம். அதாவது, எண்ணியதைக் காட்டிலும் சிறப்பான ஒன்று, எதிர்பாராத, ஆனந்தம் மிகுதலைத் தருதல் இன்ப அதிர்ச்சி அல்லது ஆச்சிரிய ஆனந்தம்.

தவிர, அத்ருப்தியும் ஆனந்தமே.

ஒரு முறை, இரவு நேர பூஜைக்குப் பின், பெரியவாளின் பல்லக்கின் கதவைத் திறந்து வைத்தபடியே தி.நகர் வீட்டில் பேசிக்கொண்டிருக்கையில் (சரண், கௌஷிக் என்று ஞாபகம்) எதற்கோ ரொம்ப வருத்தமாயிடுத்து என்று சரண் சொன்னான்.

"அதுனால என்னடா... அதுவும் ஆனந்தம் தான்" என்றேன்.

"சார்... எப்படி சார்..," இருவரும்.

"VIBGYOR -னு சொல்றபோது எல்லா கலரும் வெள்ளைலேர்ந்துதான் வரதுன்னு சொல்றயோல்யோ? அது மாதிரி, எல்லா உணர்வுகளுமே சந்தோஷம் தான்... இப்போ உங்க ஆத்துலயோ, பிரெண்ட்ஸ்-கோ எதானும் ஆயிடுத்துன்னா, நீ வருத்தப்படுவே இல்லையா? "

"---------- ஆமாம்..."

"சிரிப்பு வருமோ?"

"வராது"

"அப்படி வந்துடுத்துன்னா, நீ ஒரு பைத்தியம்னு நீயே நெனச்சுப்ப.. இல்லாட்டி ஒம்மேலயே உனக்கு எரிச்சல் வரும்.... ம்ம்?

"ஆமாம்..."

"அதான்.... சோகமா இருக்கறபோது, கவலைப்பட்டுண்டு இருக்கோம்னு சொல்றோமே தவிர, அப்போ கவலையோ வருத்தமோ இல்லேன்னா, அது ஆனந்தம் இல்ல.. So, சந்தோஷங்கறது அந்தந்த உணர்வுகளோட இருக்கறது.... சிறுமை கண்டு பொங்கலேன்னா ஆனந்தமில்ல -ங்கறா மாதிரி, அங்க கோபம் வந்தாதான் சந்தோஷம்.. "

"சோகம், கோபம், வெறுப்பு, அருவருப்பு இவைகளின் காரணம் எதுவாயினும், அந்த உணர்வுகளோடு இருத்தல் அல்லது அவற்றை வெளிப்படுத்துதல் ஆனந்தமே. தேன் இனிப்பதாக நாக்கு உணர்ந்தாலும், உள்ளீடாக அதன் சுவை கசப்பும் துவர்ப்பும் என்பதைப் போல".

அதிருப்தியும் திருப்திதான். சகல உணர்வுகளும் சந்தோஷம் போல, சகல நிறங்களிலும் வெள்ளை ஆதாரம் போல, ஒன்று தான் எல்லாமாக இருக்கிறது. எனவே, இல்லாததாகவும் அதுதான் இருக்கிறது".

அடைதலின் ஆனந்தம், அதை அடைவதின் முயற்சியால் பெருகுகிறது. சாதாரண விஷயங்களில் கூட, சிரமப்படுவதன் மூலம் ஆனந்தத்தை அதிகரித்துக் கொள்கிறோம்.

கடவுள்களை கொண்டு மலை மீது வைத்த இரகசியம் அது தான். தெரு முக்கில், மரத்தடியில் இருக்கும் பிள்ளையாரை சுலபமாகப் பார்க்கும் மனது அடையும் மகிழ்ச்சி, அவரையே, எங்கேனும் மலை மீதோ, விரதமிருந்தோ பார்க்கும் போது பல மடங்காகிறது. அதையும் கூட, நீட்டித்தால் அருகிவிடும் ஆபத்தைத் தடுக்கவே, "ஜருகண்டிகள்" அவசரப்படுத்தி நகர்த்தி விடுகின்றன.

"என்னதான் சொல்லுங்க, நாப்பத்தெட்டு நாள் விரதம் இருந்து, இருமுடியோட காட்டு வழீல செருப்பிலாம போய்ட்டு வர்ற சந்தோஷம் வேற எதுலயும் வராதுங்க..."

அதற்குத்தான் இத்தனையும். அந்த விரதம் உடலையும், பாதங்களையும் ஒரு மூன்று நாள் சீரற்ற காட்டு வழிக்கு தயார் செய்யத்தான் எனினும், அந்த நியமங்கள் மட்டுமல்லாது, மேற்கொள்ளுகிற கஷ்டங்களாலும் இன்பம் கூடுவது உண்மை.

மலை மேல் கொண்டு வைத்தலும், உள்ளே நுழைந்ததும் காணப்படும் நீண்ட வெற்றுப் ப்ராகாரங்களும் நெடிய கோபுரங்களும், மறைமுகமாக கர்வத்தை அழிக்கும் தந்திரங்களோ உபாயங்களோ தான். நான் மிகச் சிறியவன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவே இப்படி பிரம்மாண்டம்.

நுழைந்ததும் வெற்றிடம் கண்டு, வெறுமை மனதைத் தாக்கும். பெரிய கோபுரத்தின் அடியில், சிறிய உருவமாய் நின்று, மையப் பகுதியின் விமானத்தை அண்ணாந்து பார்க்கின்ற அந்த செய்கையிலே, ego கரைந்து, தான் எனும் அகந்தை தாழும்; கரையும்.

உடல் பற்றிய, இருப்பு குறித்த கர்வம் அழிவதால், மனம் ஓரிடத்தில் குவியம். மனமும் உடம்பும் 'husband and wife resemble each other' என்பது போல, ஒன்றையொன்று சார்ந்தவை தான்.

மனம் குவிதல்தான் தன்னைத் தானறிதலின் முதல் படி.

இதுவே தான் கேரளத்தில், வேறு விதமாய் காணப்படுகிறது. அங்கே, குறுகிய வாயில், அதிக வெளிச்சமின்மை போன்றவை அதைச் செய்கின்றன. உடம்பு குறுகினால் ஏனோ, எண்ணங்களும் அலைவதில்லை.. குறைந்த வெளிச்சம், இலக்கை மட்டும் மங்கலாகக் காட்டுவதில், கண்ணும் மனதும் கூர்மையாகி, இலக்குடன் ஒன்றுதல் இலகுவாகிறது.

[ Something secretly implied என்பதை அங்க ஒரு "இக்கு" வெச்சிருக்கேன் என்பார்கள். மனம் குவிதலில் அந்த "க்" அகன்று, இல'க்'கு 'இலகு'வாகிறது :) ]

ஆவுடையார் கோவில், சிதம்பரம், ஸ்ரீரங்கம் போல சிற்ப நுணுக்கங்கள் அதிகம் இன்றி, பிரமிடுகளை நினைவூட்டும் விதமாய் கோவில்கள். சிறிய படிக்கட்டைத் தாண்டி, ப்ரதக்ஷிணமாக கிழக்கு வாசல் வரை சென்று, அங்கே நின்றபோது, ஒரு பெரிய ஆஞ்சநேயரும் கருடனும் இருபுறமும் இருக்க, நடுவில் பெரிய peetam போன்ற அமைப்பிருந்தது. அந்த இடத்தில் வீல் சேரை இறக்கி, சற்று நேரம் இருந்தபோது, பீடத்தின் மறுபுறம் சற்று தொலைவே உள்வட்டம் தெரிந்தது. அங்கே, மேடையில் ஏதோ யக்ஞ கார்யங்கள் போல் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. அதையும் தாண்டி, ஸ்வர்ணமும் விளக்குகளுமாய் தெளிவற்றதாய் தெரிந்தது.

என்ன என்று புரியவில்லை-அது சன்னதி என்பதைத் தவிர...

"ஏன் பெரியவா எனக்கு இதெல்லாம் தெரீல.. நான் என்ன பாக்கறேன் - நீ எங்க இருக்கேன்னு தெரியாம இது எதுக்கு.. நான் ஏன் இந்த மாதிரி இங்க வரணும்....", என்று எண்ணங்கள்....

"சார்.. நீங்க தமிழா - மலையாளமா?"

பின்னாலிருந்து குரல் கேட்டது, யாரோ ஒரு மாமா.

"தமிழ் தான்"

"ஓ... அதாவது, நீங்க பார்த்துண்டு இருக்கறது, ஸ்வாமியோட நாபி பாகம். பதினெட்டு அடி நீளத்துல படுத்துண்டிருக்கார். பூரா, ஆயிரத்தெட்டு சாளக்ராமங்கள்ல பண்ணினது. வைஷ்ணவ சம்ப்ரதாயப்படி, பன்னண்டு சாளக்ராமம் இருந்தா, ஒரு கோவிலுக்கு சமானம். அதனால இங்க தரிசனம் பண்ணீண்டோம்னா, ஆயிரம் திவ்ய தேசங்கள்ல தரிசனம் பண்ண மாதிரி... சேர்த்து பாக்க முடியாது.... மூணு வாசலா வெச்சு, ஸ்வாமியோட தலை, வயிறு, பாதம்னு... இது நாபி பாகம்.... நன்னா பாருங்கோ"

.............................

அங்கிருந்து வந்ததும் ஆட்டோ கிடைக்கவில்லை... ஒரே ஒரு ஆட்டோ. கொஞ்சம் நிறம் கூடி, தலையில் முடியோடு, கலாபவன் மணி சற்று இளைத்தார்போல இருந்த ஓட்டுனரிடம், ஆத்துக்கால் பகவதி டெம்பிள் போகணும் என்றேன். பிள் (ple) என்று அழுத்தினாலும் அவன் காதில் temble என்றுதான் விழுந்திருக்கும்.

ஏறுவதற்குச் சிரமமாய் இருந்தது. சீட் முன்னால் நீட்டியபடி இருந்ததால், இடைவெளி குறைச்சல். உள்ளே என்னைப் பொருத்திக்கொள்ளக் கொஞ்சம் நேரமானது. வீல் சேர் பாதி தான் உள்ளே போனது. அருண் டிரைவரின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு மீட்டரைச் சுற்றி கையைக் கொண்டு வந்து, வீல் சேரைப் பிடித்துக்கொண்டான்.

ஆத்துக்கால் பகவதி கோவிலுக்குப் போனோம். அருணை மட்டும் போகச் சொன்னேன். "சார், இங்க கோவில் எல்லாம் எறக்கத்துல இருக்கும்... நல்ல மழை வரும்... தண்ணி உள்ள வரும்... அதுனால நிறைய படிக்கட்டு உண்டு..." என்றார் ஆட்டோக்காரர்.

ஹரிஹரன் வீடு, அங்கிருந்து தொலைவே இருந்தது; ஆனால், நாஞ்சில் அருள் சொன்னது போல கால் மணி நேரத்தில் போனோம் - தேடியலைந்த பத்து நிமிடங்களைக் கழித்தால்.

கொல்லூர் பகவதி தான் அவர்கள் இஷ்ட தெய்வம். ஹரிஹரனின் அப்பா - sanskrit scholar. பாகவதம் எல்லாம் மலையாளத்தில் மொழி பெயர்த்தவர். அக்கா, நல்ல violinist. அத்திம்பேர் கிருஷ்ணன், ப்ரோஹிதர். Online-ல் விவரங்கள் கொடுத்தால், சகல விதமான ஹோமங்களிலிருந்து removal of black magic வரை செய்யும் பிரபலஸ்தர்.

காயத்ரி சகஸ்ரநாமம், அச்சிட்டு ஓலைச்சுவடி போலவே pack செய்து வைத்திருந்ததைக் கொடுத்தார். சுந்தரின் அக்கா வீட்டிற்கும் சென்றோம். கணவர் ISRO-வில் வேலை செய்கிறார். பஜனை, ஜபம் நிறைந்த தொல்லைக்காக்ஷிகளற்ற குடும்பம்.

இரண்டு மணி நேரம் சுற்றிய பின், விநாயகா டூரிஸ்ட் ஹோமை அடைந்தால், 72 ரூபாய்தான் காட்டியது மீட்டர். waiting charge 80 ரூ. சேர்த்துக் கொடுத்தேன். மதிய உணவை விழுங்கி, ரூமைக் காலி செய்து, ரயிலில் பார்த்துகொள்வோம் இரவு உணவை என்ற, "ஆனந்த" முடிவுடன் ஏறிவிட்டோம். விதி சிரித்தது!

இந்த முறையும் பெட்டியில் சாமிகள் பல. எங்கோ பார்த்தவராக இருவர். நினைவுக்கு வந்தது. ஈகா தியேட்டர் சிக்னலில் நிற்கும், traffic police. அதில் ஒருவர் அண்ணா நகர் crime branch ஆசாமி. பெருக்குவதாகச் சொல்லியபடி விடலைப் பையன்கள் குனிந்து எல்லா இருக்கைகளுக்கு அடியிலும் பார்வையில் மேய்வதைக் காட்டினார்.

"சாப்பிடறீங்களா சாமீ", என்று கை நிறைய இட்டிலிப் பொட்டலங்களுடன் கேட்டார்கள். "அடுத்த ஸ்டேஷன்ல வாங்கிக்கறோம்... மத்யானம் சாப்பிட ரொம்ப லேட் ஆயிடுத்து", என்று சொன்னேன். அடுத்த ஸ்டேஷனில் வண்டி நுழையும் போதே, 200,300 சாமிகள் பிளாட்பாரம் எங்கும் பரவியிருந்தார்கள். எல்லா சாமிகளும் பசியாறியது போக non-veg மட்டுமே மீதமிருந்தது. அதற்குப் பின் வந்த ஸ்டேஷன்கள் எல்லாம் இதே கதைதான். எர்ணாகுளம் தாண்டி ஏதோ ஊர் வந்தபோது பதினொரு மணிக்கு மேல் ஆகியிருந்தது. GoodDay biscuit pocket - ஐ "மாமா...பிஸ்கோத்து.." என்று சொல்லாமல் நீட்டினான் அருண்.

பெட்டியில் unreserved போலக் கூட்டம். TTE கண்டபடி கத்தினார். 400 ரூபாய் fine என்று மிரட்டியே காலி செய்தார். உரத்த குரலில் இந்தப் பாடாவதி வேலைக்கு வந்ததை ஒரு பாடு அழுதார். அதையும் மீறி அவ்வப்போது தூங்கினேன்...

தென்னை மரங்களின் ஒண்டுக்குடித்தனமாய் இருந்த கேரளாவை தண்டவாளத்தின் கட்டைகளை விழுங்கியபடி கோயம்புத்தூரில் தொலைத்துவிட்டு அதிகாலை மூன்று மணிக்கு ஏதோ ஒரு ஊரில், மூடியிருந்த புத்தகக் கடையின் நிழலில் கட்டிக்கொண்டிருந்த ஜோடியைப் பார்த்து, higgin bothams - hug in both arms என்று அரைத்தூக்கத்தில் உளறியது pun-பட்ட மனது....

Friday, April 17, 2009

திருவனந்தபுரமும் பெங்களூருவும்...3


அலம்பிய பின் துண்டைத் தேடும் முகம் போல மழை பெய்து ஈரமான பூமியாகவே பெரும்பாலும் காக்ஷி அளித்தது கேரளா. பானுப்ரியா.. சித்ரா.. போலின்றி சகல பெண்களும் தாவணியோ துப்பட்டாவோ அணிந்திருந்தார்கள். மாமனார்கள் இன்ப வெறியின்றி சாதுவாய் வேஷ்டி-துண்டு-குடை காம்பினேஷனில் நடந்தார்கள். லைம் சோடா நிறைய விற்றுத்தீர்ந்தபடியிருந்தது.

ஹரிஹரனின் அத்திம்பேர் எனக்காக நிறைய சிரமப்பட்டு பதிமூன்று இடங்களை நேரில் சென்று பார்த்து, ground floor-ல் western toilet இருக்கும், சுத்தமான இடத்தை பதிவு செய்திருந்தார்.

விநாயகா டூரிஸ்ட் ஹோம்.

நியூ தியேட்டர் அருகில், இரயில் நிலையத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் [பத்து பேர் மாறி மாறி] இருந்தது.

ரூமிலிருந்து ஆல் இந்தியா ரேடியோவிற்கு தொல்லை பேசினேன். இந்த மாதத்திலிருந்து [april] என்னுடைய சம்பாவனையை சற்று கூட்டியிருப்பதாய் ஏழாம் தேதி கடிதம் வந்தது. அதைக் quote செய்து fax அனுப்பியிருந்தேன். அதை ஞாபகப்படுத்தினால் இந்த ப்ரோக்ராமின் செக்கை revise செய்வார்கள்; செய்தார்கள். தினமும் மாலை ஐந்து மணிக்கெல்லாம் வருண பகவான் உணர்ச்சிவசப்படுவார்; இரண்டு மணி நேரங்கள் பொழிந்து தள்ளுவார்... சில நாட்களாக இது தான் இங்கே வழக்கம் என்று கேள்விப்பட்டதில் பிரயாண அலுப்பும் களைப்பும் ஜகா வாங்கியது.

"ஹலோ, ரிசப்ஷனா.. இவிடே ஊணு கழிக்காம் ரூம் சர்வீஸ் உண்டோ?"

கொலைபட்ட மலையாளம் கஜேந்த்ரா எனக்கதறியதுபோல், மறுமுனையில் மீன் வாசனையோ மூக்கொலியோ இல்லாத தமிழில் பதில் வந்தது.

"இல்ல சார்... பசங்ககிட்ட சொன்னா, வெளீலேர்ந்து வாங்கீண்டு வருவாங்க... "

"அதுக்கு நாமளே வாங்கினா, நடூல அவன் அடிக்கற காசு மிச்சம் மாமா..." என்றான் அருண்.

அவன் அங்குமிங்கும் தேடியதில், ‘குக்குடக் குமிழ்’ கடைகளுக்கிடையில் (முட்டை) ஓரிடத்தில் வ்ருந்தாவனம் என்று எழுதியிருந்தது. கொட்டை கொட்டையாய் சாதம். ஆனால், சென்னையில் கிளப்பிய பீதி போலில்லாமல் ஒத்துக்கொண்டது.

நாலே முக்காலுக்கே கார் கொண்டுவந்துவிடுமாறு நாஞ்சில் அருளிடம் (staff artiste) சொன்னேன். கார்த்திகை திருநாள் அரங்கம் பக்கத்தில் தான் இருந்தது. "எங்கிருந்து எங்க வேணாலும் காமண்ணேரத்துல போயிடலாம்.. சின்ன ஊர் தான்," என்றார்.

த்ருஸூர் திலீப்குமார் - பாட்டு

சேர்த்தல சிவகுமார் - வயலின்

ஈரோடு நாகராஜன் - ம்ருதங்கம் [chennai]

ஏ.எஸ்.என்.ஸ்வாமி - கஞ்சிரா [banglore]


திலீப் குமாருக்கு அமைதியான முகம். இரண்டு கட்டை ஸ்ருதியில் அழுத்தமான பாட்டு. Sound check என்று முன்னதாக அமர்ந்ததில் அரங்கம் காலியாக இருந்தது. பிறகு விளக்குகளை ஏகத்திற்கு போட்டு இருட்டாக்கியதில், வந்த பின்பும் தெரியவில்லை.

ஏ.எஸ்.என். ஸ்வாமி வந்ததும் ஹொகேனக்கல் - பெங்களூரு அடிதடிகள் மறந்து சகஜமானேன்.

க்ருஹ பலமேமி - ரேவகுப்தி - ஆதி தாளம். அதை பாட ஆரம்பித்தது ஒலியின் சம நிலையை சரிபார்த்துக் கொள்ள என்பதை மறந்து நிறுத்தாமல் பாடினான், ஓரத் திரைகளின் மறைவிலிருந்து நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் கூப்பிடுவதை அறியாமல். நான் கை அசைத்துக் காண்பிக்கலாம் என்றால் கண்கள் மூடியிருந்தன. ஒருவாறு தெரிவித்தேன். பிறகு குத்து விளக்கேற்றி, எங்களை அறிமுகம் செய்த பின் கச்சேரி தொடர்ந்தது.

நீ தயராதா - வசந்த பைரவி - ரூபக சாபு தாளம். பாவம் நன்றாயிருந்தது.
பின்னர், சஹானாவில் ஆலாபனை.
நட்பு கொண்ட சஹாவின் நாவில் ஆலாபனை; இதழில் - புன்னகை.
‘ஈ வசுதா நீ வண்டி தைவமு’ ஸ்வரங்களுடன்.
விறுவிறுப்பிற்கு விடஜாலதுரா (ஜனரஞ்சனி - ஆதி).

சுபபந்துவராளியில் நல்லதொரு ஆலாபனையைத் தொடர்ந்து ‘என்னாளு ஊரகே’ என்ற சாஹித்யம் மிஸ்ர சாபுவில். 86-லோ, 87-லோ, சோமு மாமா, நாடார் மேடு (ஈரோடு) வீட்டில் பஜனை செய்த போது கணபதி கிருஷ்ணன் பாடி இதே பாட்டிற்கு வாசித்தேன். அந்த நினைவுகள் இப்போது வருகின்றன.

"நாகராஜா...உன் சந்தேகமெல்லாம் என்கிட்டே கேக்காதே... கணபதி கிருஷ்ணனைக் கேளு... அவன்தான் research எல்லாம் பண்ணுவான்..." என்ற, மாமாவின் ‘பக்தாளுக்கெல்லாம் ஒரு விக்ஞாபன’க் குரல் காதுகளில் ஒலிக்கிறது.

மிஸ்ரத்தில் மூன்று தள்ளி தனியாவர்த்தனம். அது ஒரு சிக்கலான இடம். I played some complicated and innovative varieties and decided not to disturb the kanjira player. ஆனால், பூசாரி வரம் கொடுத்தும் ‘ஸ்வாமி’ கொடுக்கவில்லை. அவனே ஒரு கோர்வையை த்ரிகாலம் செய்யப்போய் மாட்டிக்கொண்டான். ‘நாபாலி ஸ்ரீ ராமா’ என்ற செஞ்சுருட்டி கீர்த்தனையும், ஈரோட்டில் நான் அடிக்கடி பாடிக் கொண்டிருந்த ‘கமலாப்த குல’ என்ற ப்ருந்தாவன ஸாரங்கா கீர்த்தனையும் பாடி இனிதே நிறைவடைந்தது.

வெளிச்சத்துக்கு வந்த audience-ல் பாதி பேர் வித்வான்கள். மணி அய்யரின் சிஷ்யர் சுரேந்த்ரன் போன்றோர் வந்திருந்தனர். காதுக்கு இனிமையாக நிறைய அபிப்பிராயம் சொல்லிப் பாராட்டினார்கள். அவைகள் உண்மையாகட்டும் என்று மானசீகமாகப் பெரியவாளை நினைத்துக்கொண்டேன்.

திரும்பி ரூமுக்கு வரும் வழியில் அருள், நேந்திரங்காய் சிப்ஸ் கிடைக்கும் இடங்களை விளக்கியபடி வந்தார்.

மறுநாள் காலை அனந்தபத்மனாப ஸ்வாமி கோயிலுக்குச் சென்றோம். மேற்கு வாசலில் சின்ன படி தான் என்று ஹரிஹரன் சொல்லியிருந்தான். ஆனால் அங்கே, வீல் சேரில் போக அனுமதியில்லை என்றனர். மேலும் வேஷ்டி கட்டாதவர்களை உள்ளே அனுமதிக்கும் வழக்கமில்லை என்றார்கள்.

திரும்பிப் போய்விடலாம் என்று தோன்றியது. வேஷ்டியாவது பேன்ட்டின் மேலே வைத்துக்கொள்ளலாம்; வீல் சேர் இல்லாமல்? வாயிற்காக்கும் ஒருவர், "கொஞ்ச நேரம் வெய்ட் செய்யு சாரே.. ஓஃபீசர் இவிடே வரும்... சோதிக்காம்.." என்றார்; வந்தார்.

வெளிப்ராகாரத்தில் மட்டும் போகலாம் என்ற நிபந்தனை ஜாமீனில் உள்ளே (!) போனேன்.


Thursday, April 16, 2009

திருவனந்தபுரமும் பெங்களூருவும்... 2


எதிரிலும் அருகிலும் காலியாயிருந்த இருக்கைகளை யூகிக்க முடியவில்லை. சட்டென மேலே சென்ற பார்வையில் அப்பர் பர்த்தில் வரிசையாய் இருமுடிகள். அது, விஷுவிற்கு சபரி மலை செல்லும் சீசன். இடது புறம் காலியானதால் வலது ஃபிளாட்பாரத்தை மேய்ந்ததில் [இப்போதுதான் அசை போடுகிறேன்], அதைத் தாண்டி ஒரு வண்டியிருந்தது. வருஷம் பூரா விரதம் இருந்தாலும் குறைக்க முடியாத குண்டாக ஒரு "சாமி" அந்த இரயிலின் கதவருகில் கால்களை, அக - - - ட்டி நின்று, மறுபக்கத் தண்டவாளத்தில் நீர்பாய்ச்சியபடி க்ஷண நேரம் சகல கவலைகளும் துறந்து சமாதியானான். “Indians eat in private; ease in public” என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.

முகம் தவிர வேறு அடையாளங்களின்றி ஆறு பெண்கள், ஃபர்தாவில் மறைந்து, வந்து அமர்ந்ததும் செல் போனில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்கள். பாவப்பட்ட கிழவர் போல (குருசாமி) ஒருவர் பிரசன்னமாகி, "இது பூரா ரிசர்வ்டு... எல்லாம் எங்க சீட்டு..." என்றார். அதையே ஆங்கிலத்தில் நான் இரண்டு முறை சொன்னதும், “yeah.. we will go..” என்று சடுதியில் மதம் மாறி, "பீட்டருடன்" சென்றனர்.

"ஏறக்குறைய ரெண்டு ரயில்லயும் ஒரே ப்ராப்ளம் தான்... வசதி, படிப்பு, நாகரீகம் தான் வித்யாசம்", என்று கிளறியதில் அருண் யோசிக்க ஆரம்பித்தான். இரயில் கிளம்பும் நேரம், சொல்லிவைத்தாற்போல குருசாமியின் அனைத்து சிஷ்யர்களும் கையில் கொரியன் மொபைல்களுடன் உட்கார்ந்தார்கள்.

கல்லூரி மாணவர்கள்.

இயர் ஃபோனில் தீப்பிடிக்கத் தீப்பிடிக்க முத்தம் கொடுத்தபடி, அபிமான நாயகிகளின் அசைவுகளுக்கிடையே, கருப்பு வேஷ்டியில் கற்பைக் காப்பற்றிக்கொண்டிருந்தார்கள்.

எல்லா முகங்களிலும் நீண்ட விரதத்தை முடித்து, விரும்பியதை உண்ணும் ஆவலும், தள்ளிவைத்தவற்றை [இத்தனை நாளாக “தள்ளிவை-தவற்றை”?] ஓரிரு தினங்களில் ஸ்பர்சிக்கப்போகும் ஆசையும், மெல்லிய சிரிப்பாய் இரகசியக் குரலாய் அவ்வப்போது மின்னியது. பேன்ட்ரி கார்னர் ஆசாமிகள், சிக்கன் பிரியாணி - முட்டை வகையறாக்களை உரத்த குரலில் விற்றுத்தொலைக்க, "டேய்..மாமா...அவன்கிட்ட சொல்லி வெய்.. இங்கியே வந்து கொரலு குடுத்து என்னை டென்ஷன் பண்றான்..."

த்ராக்ஷையைத் தின்று தன் மேலேயே விதையைத் துப்பிக் கொண்டது ஒன்று. தன் கைகளில் துப்பியதை, ஜன்னலோர முகம் தாண்டி நீட்டி, வெளியே போட்டது ஒன்று.

வெளிநாட்டில், ஃபிரிஜ்ஜிலிருந்து தண்ணியை அப்படியே குடித்து விட்டு, மீதியை வைத்து, அடுத்து வருபவன் அதையே - அதே போல் குடிப்பதும் எதையேனும் தின்று விட்டு, கை அலம்பாமல் இருப்பதும், ஆச்சிரியமில்லை. ஆனால், ஞானபூமி - ஆச்சாரத்தின் பிறப்பிடம், மற்றைய தேசங்களிலே ஆதிவாசிகளாக மனிதர்கள் உலவியபோது, நாகரீகம் தழைத்தோங்கிய பாரதப் பெருநாட்டில்.... இன்னும் பல விஷயங்கள் இவ்வாறு இருப்பது கவலையாய் இருந்தது.

சில நாட்களுக்கு முன், மயிலாப்பூர் ஜூஸ் கடைக்கருகில் இருக்கும் chat corner-இல், விஸ்காம் முடித்த என் சிஷ்யனும் அவன் தோழ-தோழியரும் பானி பூரி, பாவ் பாஜி என்று சகலத்தையும் உள்ளே இறக்கிகொண்டிருந்தார்கள். இவள் பாதி கடிதத்தைத் தான் இன்னொருவன் சாப்பிட்டான். ஒரே பாவ் பாஜி பலரால் கடிக்கப்பட்டது. பேல் பூரியை கையில் எடுத்துச் சாப்பிட்டபின் அதுவே இன்னொருத்திக்கு ஊட்டிவிடப்பட்டது. சரி, இதெல்லாம் ஒரே இளநீரில் ரெண்டு குழாய்கள் கதை என்று பார்த்தால், அதுவும் இல்லை.

எல்லோரும் எல்லோரையும்.

உதட்டோர மீதங்கள் தவிர எல்லாவற்றையும் பகிர்ந்து நட்பின் மேன்மையை கொண்டாடும் அறியாமையோ (அல்லது குரூப் செக்ஸ் போன்று ஒரு மறைமுகக் காமமமோ... ஏதோ ஒன்று...

இரண்டு முறை தன் வேஷ்டியில் துப்பி, நைசாக அதைக் கீழே தள்ளிய மாதவனிடம்,

"துப்பாதபா.. நடக்கற இடம்.." என்றேன்.

"அப்பிடியா.." கிண்டலோ அல்லது ஏதோவொன்று த்வநித்தது.

"வ்ரதம் இருந்துண்டு, மாலை போட்டுண்டு இப்படி எச்சல் பண்றியே... "

வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். ஆனால், அப்புறம் துப்பவில்லை. அவன் பெயர் மாதவன் என்று திருவந்தபுரத்தில் இறங்கும்போது தெரிந்து கொண்டேன். அதற்கு பல ஸ்டேஷன்கள் முன்பே, இரயிலின் சகல சாமிகளும் இறங்கியிருந்தார்கள். சீட்டுக்கு அடியில், எதையாவது விட்டிருக்கிறேனா என்று பார்த்தபோது அவன் படம் ஒட்டிய லைசென்ஸ் கிடந்தது.

"அருண்... இத அதுல இருக்கற அட்ரசுக்கே கூரியர் பண்ணிடலாம், ரூமுக்குப் போனதும்" சற்று நேரம் ஆராய்ந்து விட்டு, "வேணாம்... இது டூப்ளிகேட் தான்" என்றான் அருண்.

Wednesday, April 15, 2009

திருவனந்தபுரமும் பெங்களூருவும்... 1



"நீங்க கேரளால வாசிச்சிருக்கேளா? ஷண்முகானந்த சபால (மும்பை) வாசிச்சிருக்கேளா?" என்பன, கலைஞர்களிடம் கேட்கப்படும் வழக்கமான கேள்விகளில் ஒன்று.

திருவனந்தபுரத்தில் கச்சேரி, அதுவும் ரேடியோ என்றதும் மகிழ்வில் திளைத்தது மனது. வெளிநாட்டு சிஷ்யர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகையில், ரேடியோ, மும்மூர்த்திகள் விழா என்றெல்லாம் குழப்பாமல், நேஷனல் ப்ரோக்ராம் என்று அனுப்பிவிட்டேன். அங்கே போனால், நிஜமாகவே இதை நேஷனல் ப்ரோக்ராம்-ஆக ஒலிபரப்ப முடிவு செய்திருப்பதைத் தெரிவித்தனர். அதோடு, தூர்தர்ஷன் நேஷனல் சேனலிலும் இது ஒளிபரப்பாகும் என்று, கச்சேரி நடந்த "கார்த்திகை திருநாள்" அரங்கத்தை, பெயருக்கு ஏற்றாற்போல் ஏகப்பட்ட விளக்குகள் பொருத்தி படம் பிடித்தனர்.

கேரள மன்னர்களுக்கு அவரவர் பிறந்த நக்ஷத்திரம் தான் பெயர். ஸ்வாதி திருநாள் (கேரளத்தில் கொண்டாடப்படும் ஒரு இராஜா. கலைகளை ஆதரித்தவர்; அவரே ஒரு வாக்கேயக்காரர்)என்பதும் அதைப் போலத்தான். சேஷன் ஒரு முறை, "தஞ்சாவூர் பிராமணர்களும் கேரள பிராமணர்களும் மிகுந்த அறிவாற்றலுடையவர்கள்" என்று கூறியபோது, சிவராமன் சார், " ஏன்னா, தஞ்சாவூர்ல ஸர்போஜி மகாராஜாவும் கேரளாவில் ஸ்வாதி திருநாளும் கலைகளை ஆதரித்ததால் பண்டிதர் கூட்டம் நாட்டின் பிற பாகங்களிலிருந்து அங்கே நிலை கொண்டது. அந்த ஜீன்..." என்றார்.

பத்தாம் தேதி மாலை வெகு முன்னதாக இரயிலில் அமர்ந்தபோது பெட்டியில் நானும் அருணும் மட்டும் இருந்தோம். வீல் சேரை பூட்ட முயலும்போது மிக அருகே நீண்ட கை ஒரு அலியினுடையது. Handicapped என்பதை, physically challenged-differently abled என்பது போல திருநங்கை-அரவாணி.

அலி எதிர்ப்படுதல் தீய சகுனம் என்கிறது சாத்திரம். பாக்கெட்டிலிருந்து ஐந்து ரூபாய் போட்டதும் விடுதலை.

ஓரமாய் சென்று அமர்ந்ததும், அடுத்த தண்டவாளத்தில் அன்-ரிசர்வ்ட் பெட்டியில் எட்டு பேருக்கான இடத்தில் இருபது பேர்களுக்கிடையில் நீலப்புடவையில் நுழைந்த பெண்ணின் கையில் ஒன்று;கால்களைத் தழுவியபடி இரண்டு. கூட்டத்துக்கு நடுவில் ஜன்னலோர இருக்கை அருகே மூன்று குழந்தைகளும் சொருகப்பட்டு, இரண்டு சீட்களுக்கும் நடுவில் நீலம் நின்றபோது, வாட்டர் பாட்டில் கொக்கியில் தொங்க விடப்பட்டது போல் எதிர் இருக்கை முஸ்லீம் பெண்ணின் கணவன், நீலத்தின் பின்னால். "மேசைக் கரண்டி முறை"யில் ஏற்பட்ட சில அசைவுகள், அங்கே ஒரு புயலைக் கிளப்பியது.

சகலரும் திடீரென அடித்துக்கொண்டார்கள்.

குழந்தைகள் வீரிட்டு அழ ஆரம்பித்தன.‘ழ’கரத்தில் முடியும் அத்தனை வார்த்தைகளையும் அந்த பெண்கள் இறைத்துக்கொண்டனர்.

விரிப்பில் கூடும் விதங்கள், விவரிப்புகளில் மலினமாயின.

நீலத்தின் தாலி-நகைகள் அறுந்து தொங்கின. தன் பின்னே ஒருவன் நிற்பதை அவள் ஆட்ஷேபித்ததுதான் காரணம். அடி விழுந்தது... அனேகமாக எல்லோர் விரல்களுக்கிடையிலும் முடி இருந்தது. இரயில் கிளம்ப இன்னும் இருந்த முக்கால் மணி நேரமும், "அஞ்சு பவுனை அறுத்துட்டா அவ... எப்பிடியும் ஏறங்கரத்துக்குள்ள .......... துருவேண்டி. உன்ன.... புருஷன வுட்டுட்டு இருக்க முடியாத ..............களுங்க எல்லாம் ......... அறுத்து வெச்சுக்குங்கடீ....”

ஆஸ்த்ரேலியா நெட்வொர்க்கின் பிசினெஸ் இங்க்லிஷ் பாடங்களின் சம்ப்ரதாய வார்த்தைகள், திரும்பத் திரும்ப உபயோகப்படுவதைப் போல, அடங்காத ஆத்திரமும் - உறுப்புகளின் செயகையை விளக்கும் சொற்களும் மீண்டும் மீண்டும் ஒலித்த வண்ணம் இருந்தன, நேயர்கள் விரும்பாவிட்டாலும். அவற்றைக் காற்றில் கரைத்தபடி அந்த இரயில் கிளம்பும் வரை , என்ன விதமாய் முகத்தை வைத்துக்கொள்வது என்றறியாமலேயே அருண், இருக்கைகளையும் ஜன்னல்களையும் வேடிக்கை பார்த்துச சாய்ந்திருந்தான். எதாவது சொல்ல விரும்பினேன்.

(தொடரும்...)

Monday, April 13, 2009

அளவிலா அன்பு...


Not even a day passes without an experience of feeling HIS grace, but, only some can be shared.

Last week, I visited someone in mylapore who noticed the zip in my bag was kept open! I said, I knew it and I don't have time to take it to the repairer. He said he knows one who has a shop nearby and took me there.

Before I could take the things from my bag, he took the bag to the man who was stitching and told him to change the runner. My friend, who always eats vetrilai and seeval, hope you understand, most of them have a habit of touching their lips or teeth with their fingers and they never care to wash their hands… he put his hand inside my bag and took the hand towel, some money and my pen and, I was worried to the maximum level as I always carry a rudhrAksha mAlai in the bag….
But, there was no mAlai at all and it took a few minutes for me to realize and connect what has happened two days ago…
I need to add some flashback to it, before I continue....

That was a period when pudhu periyava and bAla periyava was camping in chennai. I just sat in front of bAla periyava and was doing japam. This took place on the stage of shrI chandhrasEkarEndhra sarasvathi hall, vANi mahAl, chennai. Then I had an opportunity to talk to His Holiness and asked Him for a japa mAlai. He said He will give.

The next day, pudhu periyava came there with bAla periyava and looking at the pomegranate kept near them, I got a feeling that there is something special about that and I asked my beloved and sweetest guru, mahA periyava (in my manas), "periyava… adhu enakku vENum"

No sign of my getting it appeared. Both the periyavas started from there… I came to the entrance on the side of the stage and waited near the steps, seeing periyava getting into the van. A man with the bamboo plate, probably he would have been the last man of the crew, crossed me and the pomegranate fell on me from the plate! He said, "adhu ungaLukku thAnnu periyava solar pOlirukku"

The next day was pradhOsham and it seemed that the paramAthmA has decided to shower HIs divine grace more...

I went to Shankara Gurukulam, house of thEdhiyUr shrI subhramaNya sAsthrigaL, where His Holiness was camping. (Once, thEdhiyUr sAsthrigaL and many vidhvAns were in a sadhas. The discussion reached a sensitive point, where a conclusion might be got, only if periyavA talks and clarifies something. As He was observing kAshta mounam, that day, the mOna dhakshiNAmUrthy showed no signs of even a small movement.

sAsthrigaL stood up and said, "innikku thEdhiyUr shrI subhramaNyan prANan oru kAlla ninnuNdE pOppOradhu… ellArum okkANdu ivLO vivAdham paNNi, idhu sariyA… idhu thappAnnu pesumbOdhu, nAn pEsa mAttEnnu periyavA okkANdu irundhA enna artham?". [I am going to die, standing in single leg, as periyavA remains silent, when the discussion is intensive]

The prapancha mahA shakthi, smiled a little, did Achamanam and talked. GURU is there only to eliminate the darkness of ignorance. Such a bAndhayvam, svAtheenam were there between the bakthA and periyavA).

I, seated in my kinetic honda three wheeler, went closer to the window of the van. Pudhu periyavA was inside and yet to open it. The people who started gathering near the van objected me to be that closer to the van, that too on a bike! When the decibel of voices increased, He opened the window and said, "avan angayE irukkattum" [let him be there itself]

And, when He came out and just walked beside towards the hall, I asked, "periyavA I need pradhOsha prasAdham today"

That day was the last day of their camp at abhiramapuram. So, He delivered a speech after pUjA and when He came back, He looked at me with a smiling face and stopped near me…. Took vibhUthi in His hand and poured it on my right hand saying, "pradhOsha prasAdham". Then both the periyavAs went inside and came back to the van, bidding a bye to the crowd.

bAla periyavA, looked at me and said to pudhu periyavA, "he asked for a rudhrAksham". He replied, "ellAm kidaikkum". Then the van moved from there.

Now, the hall of guru kulam was silent.

Only some leaves and petals of some flowers were lying on the floor. The pUjA maNdapam was there in a distance. I wanted to go there and sit nearby the maNdapam for a while and crawled the distance. When I reached there, I saw someone being there in a room behind the hall and it was bAlu mAmA!

He was busy in packing the vigrahams and accessories of pUjA, as he was the care taker of poojai kattu. I went to him and introduced myself and said, I want to do a namaskAram to shrI mAmA. He asked me to be near the maNdapam and came there.

I said, "mAmA, bless me that I should have the smaraNa of periyavA like a thaila dhArA". He asked me to wait for a while and went inside and searched intensively for something and took something which was wrapped in a red vasthram… when he opened it and gave me, I was transformed to a different world of bliss… a rudhrAksha mAlA of mahA periyavA…

That was the story of it.
It was 9.15pm when all of a sudden I got a feeling of doing japam with the rudhrAksha mAlai and dedicating that itself as a hAram to Periyava. I always keep the rudhrAksha mAlai with me, in my bag, since it was worn by Periyava and I got it from a kainkarya parA of Periyava on January 2001.
Driven by an intuition, I did the japam and put the rudhrAksham on periyavA photo itself as an offering to his lotus feet and slept. I thought of taking it back, when I had to go for a concert the next day, but, owing to some reason or other, two days after this only, the zip and runner story happened!

கணப்பொழுதும் உடனிருப்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தது, கருணை என்பதே கண்களாய்க்கொண்ட காஞ்சிக் கடவுள்...

Sunday, April 12, 2009

Rama X Vijaya -- or -- கரகாட்டம் X பூந்தோட்டம்

"ஜெயலலிதாவை பற்றி விஜயகாந்த் தொடர்ந்து பேசினால், அவரது அந்தரங்கத்தை புத்தகமாக எழுதி வெளியிடுவேன்" என்று மிரட்டியுள்ளார் இராமராஜன்.


சபாஷ்...சரியான போட்டி... பசுநேசன்-பிரேமநேசன் நல்ல combination.

I would like to share something very interesting, happened in one wedding concert that we presented. That was a marriage of some ass-director. (சிரிக்காதீங்கபா.. அஜிஸ்டெண்டு தான், சுர்க்கமா சொன்னேன்).

After main song and my thani Avarthanam was over, the singer asked me, what to sing as a lighter piece. I suggested "காக்கை சிறகினிலே". She started singing and the guy entered the hall was none but, premanEs, that too when she was singing, "உந்தன் கருமை நிறம் தோன்றுதடா"

He came to the dias, keeping his shouders and hands very rigid, just like sivaji ganesan takes any karpoora haarathi!

After reaching back home he would have bothered to imitate the ONAn of his vEshti and would have said, "நானும், எவ்ளோ நேரந்தான், தொந்தி இல்லாதமாதிறியே... தம் கட்டி நிக்கறது" :)

அயன்-A Funny story...



Saturday, April 11, 2009

ஒன்றரை மாதங்களுக்கு முன்னால்...


"ஹலோ... ஈரோடு நாகராஜன் இருக்காரா"

நான் தான் பேசறேன், சொல்லுங்கோ.

என் பேரு .................... (பெயர் சொல்கிறார்) உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நெனக்கறேன்.

மாமா! எப்படி இருக்கேள்? இப்போ ஒடம்பு எல்லாம் தேவலையா?

ஆச்சுப்பா. இப்போ நான் ரொம்ப active. பழைய மாதிரி ஆயிட்டேன். மதுரைக்கு, டாட்டா சுமோல போயிண்டிருந்த போது பெரிய accident ஆயிடுத்து. ரொம்ப நாள் கோமால இருந்தேன்; நடக்க முடியல... அது இதுன்னு... இப்போ நல்லா இருக்கேன். திருப்பாவைக் குழு திரும்ப ஆரம்பிச்சுட்டேன். ஆனா, ஈரோட்டுல இல்ல. இங்கயே தான், T. நகர்ல..

ஒ... எல்லாரும் எப்படியிருக்கா மாமா.... ஆடிட்டர் சீனிவாசன், கோபாலகிருஷ்ணன் எல்லாரும்...

எல்லாரும் சௌக்கியம். Secretary... treasurer-னு அந்தந்த போஸ்ட்ல அப்படியே இருக்கா. பதினொரு கச்சேரி போட்டிருக்கேன். நீங்க எல்லாம் அப்பவே வாசிசிருக்கணும். அப்போ ரொம்ப பெரிய பாட்டெல்லாம் மொதல்ல போடனும்னு ஒரு எண்ணம். அதான் இப்போ போடறேன்.

ஆமாம் மாமா... நீங்க எல்லாம் நடத்தினதால தான் M.S., செம்மங்குடி, பர்வீன் சுல்தானா, லால்குடி, D.K. ஜெயராமன் எல்லாம் எங்களுக்கு கேக்க முடிஞ்சுது. Infact, ராஜம் ஐயர் கச்சேரிக்கு சிவராமன் சார் அங்க வந்தப்போ தான் அவர நேர்ல பாத்தேன்! மெட்ராசுக்கு வா, சொல்லித்தரேன்னு சொன்னார்.

அப்பவே இங்க வந்துட்டீங்க இல்ல?

ஆமாம் மாமா... எய்ட்டி நைன்ல வந்தேன்.

சார் எப்படி இருக்கார்.. ரொம்ப நாள் ஆச்சு அவரைப் பாத்து...

நன்னா இருக்கார் மாமா.

சரி... நீங்க பதிணொண்ணு இல்ல பதிமூணு ஏப்ரல் free-யா?

நீங்கன்னு எல்லாம் சொல்லாதீங்கோ... eleventh... ம்ம்... free தான், சொல்லுங்கோ...

அப்போ, Hyedrabad Sisters அன்னிக்கு பாடறா. உஷா ராஜகோபால் தான் வயலின். நீ மிருதங்கம், ஒரு கடம் ஏற்பாடு பண்ணீ டுப்பா.

சரி மாமா.

உன் சம்பாவனை எவ்ளோன்னு சொல்லணும், நீ என்ன கேட்டாலும் தர ரெடியா இருக்கேன். என்னோட பழைய contacts எல்லாம் திரும்பவும் நல்ல touch- இருக்கா.

அதெல்லாம் ஒண்ணும் இல்ல மாமா, நீங்க என்ன குடுத்தாலும் சந்தோஷம் தான். உங்களால எத்தன பெரியவா கச்சேரியெல்லாம் கேட்டிருக்கோம்... அந்த பத்து நாளும் கேக்கறது தான் அந்த வருஷம் பூரா ஞாபகம் வெச்சுக்கணும்கறா மாதிரி... உங்க கிட்ட இவ்ளோ குடுங்கோ அவ்ளோ குடுங்கோன்னு demand எல்லாம் பண்ண மாட்டேன்.

இல்லையில்ல... நீங்க எல்லாம் அந்த ஊர்ல இருந்தப்போ, நான் ஒண்ணுமே செய்யல. இப்போ முடியறது, பண்றேன்... ஒரு ஐயாயிரம் ரூபா தரேன், வாங்கீண்டு வாசிச்சு நடத்திக்குடுக்கணும்.
T.V.சங்கரநாராயணன், சேஷகோபாலன் எல்லாரும் பாடறா. சௌம்யா எல்லாம் ஊர்ல இல்ல போலிருக்கு...

ஆமாம் மாமா... US டூர் போறா.

கச்சேரியெல்லாம் நம்ப ஆத்துங்கிட்டயேதாம்பா. ஒரு கல்யாண மண்டபம் இருக்கு...

தெரியும் மாமா...
நீங்க இந்த ஊருக்கு வந்த புதுசுல, அங்க ஒரு தடவ நீங்க ஏற்பாடு பண்ணி, சந்தானகோபாலனுக்கு சார் வாசிச்சார். நான் வந்திருந்தேன்.

... நீ வந்திருந்தியா... அதுக்கு அடுத்த வருஷம் தான் accident ஆயிடுத்து. இப்போ நல்லாயிருக்கேன்பா... இந்த வருஷம் ரெண்டு லக்ஷ ரூபா கலெக்ட் பண்ணப் போறேன். நிறைய கச்சேரி வெக்கணும். கடம் ஏற்பாடு பண்ணீட்டு சொல்லுபா. சில பேரெல்லாம் phone பண்ணினா மதிக்க மாட்டேங்கறா... நீங்க யாருன்னே தெரியாதுங்கறா... தேதிய நோட் பண்ணிக்குங்கோ....

சரி மாமா... நமஸ்காரம்... அப்புறம் பேசறேன்.

தேடிய சிலரில், D.V.வெங்கடசுப்ரமணியம் இருந்தான்.

"ஹலோ... வெங்கியா... பதிமூணு ஏப்ரல், free-yaa?"

"நாகரஜ்ஜீ... free தான்... சொல்லுங்கோ.. எங்க கட்டம்; யாருக்கு?"

Hyedrabad Sisters-க்கு. "...................." நடத்தறார்.

கச்சேரி டயரியைத் தேடினேன். April 11-ல் எழுதிவிட்டு, சற்று நேரம் சேனல்களை மாற்றிக்கொண்டிருந்தேன். கைபேசியில் missed calls தெரிந்தது. எல்லாம், மெசேஜ்களால் விவரிக்கப் பட்டிருந்தது. அதில் இரண்டு, ஏப்ரல் 11 free என்றால் அழைக்கவும் என்றிருந்தது. எப்போதும் இப்படித்தான். எங்காவது ஒத்துக்கொண்ட பின் உடனே அழைப்புகள் அணிவகுக்கும், அதே தேதிக்கு!

இப்போது, மூன்றாவது அழைப்பு வந்தது, land line-ல்.

"ஹலோ... ஈரோடு நாகராஜன் இருக்காரா?"

"நமஸ்காரம்... நான் தான் பேசறேன், சொல்லுங்கோ..."

"சார், நான் மிசஸ்
.................... பேசறேன். அவர் படுத்துண்டு இருக்கார். அவர் சொல்றது எதையும் நம்பாதீங்கோ. எழுந்து நடக்கவே முடீல. எக்கச்சக்க சுகர் வேற... கோமாலேர்ந்து பொழச்சதே பெருசு. இவரானா, வசூல் பண்றேன், கச்சேரி போடறேன்னு ஒளர்றார்... ரெண்டடி நடக்கவே ரெண்டு பேர் புடிச்சுக்கணும். அவரண்ட சொல்ல முடீல. பசங்களும் சொல்லிப் பாத்துட்டா. கேக்க மாட்டேங்கறார். என்ன திட்டறா எல்லாரும். நான் என்ன பண்ணுவேன்... நீங்க வேற ஏதாவது கச்சேரி வந்தா ஒத்துண்டுடுங்கோ... நான் phone பண்ணேன்னு யார்கிட்டயும் சொல்லாதீங்கோ"

நேற்று,
.................... மாமாவுக்கு phone செய்தேன்.

"யாரு... ஈரோடு நாகராஜனா.... எங்கப்பா இருக்கே... என் நம்பர் எப்படிக் கெடச்சுது!"
✔✔ whats this? tick? no....

for they are two & together, ♠[¯R¯O¯M¯A¯N¯T¯I¯C¯]♠

கிருஷ்ணன் தான்

வடிவேலு யாரையோ திட்டிக்கொண்டிருந்தன், tv-யில்...

"போடா... வென்று ..."

என்ன வார்த்தை இது என்று யோசித்தபடி முகம் அலம்புகையில்...
 வெண்ணெய்  என்பதைத்தான், சற்று காமெடி -யாக, வென்று எனச் சொல்வதாகப்பட்டது....

எனில், முதல் முதலில் இந்த வார்த்தையை உபயோகித்தவர் யார் என எண்ணியபடி துண்டால் துடைக்கையில்...

கிருஷ்ணன் தான் அந்தப் பெருமைக்குரியவன் என்று நினைத்துக்கொண்டேன்... !!!

ஒரு பாடல் நினைவில் ஓடியது..

கோகுலத்தில் ஒரு நாள் ராதை
கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்

ஏனடி "ராதா" - "வென்று"....
என்னடி சேதி என்று ஸ்ரீரங்க பாலன் வந்தான்...

:) :D :)

எல்லாப் பூக்களையும்...

நீண்ட காலத் தயக்கங்களுக்குப் பின், இன்று இந்த வலைப் பூ ஆரம்பம்.

இந்தப் பூக்களை முகர்தலும் சூடிக்கொள்ளலும் இரைத்தலுமாகிய எதுவாயினும்,
இங்கே நிகழட்டும். பூக்களை வெறுமே பார்த்துச் செல்லாதீரென்று யார் தான் உரைப்பர்!