Sunday, June 21, 2020

You have to give me your Mrudangam

Sharing an article from Kalki dated 16-12-1984 by Chaarukesi that I felt blessed to have come across. I read the article with utmost reverence as it is none other than the Mrudangam Maestro Legendary Percussionist Ramanathapuram Sri. C.S.Murugabhoopathi sir who speaks about Umayalapuram Sri K.Sivaraman Sir as UKS Sir receives the “Sangeetha Kalasikaamani'' award from the Indian Fine Arts Society. Reading this article makes me delve deep in guru smaraNai. What more can I want on world music and yoga day! Photographs of the original article have been attached. Here is the translation:

You have to give me your mrudangam

“Sivaraman’s style of playing is one that conforms to discipline. His playing contains many nuances and intricacies. Sivaraman is one who wishes to incorporate creativity and novel ideas in his performances. It is befitting that the Indian Fine Arts Society is conferring the title of “Sangeetha Kalasikaamani” upon Umayalapuram Sivaraman, who is one of the foremost musicians and performers of our art today. 

I have listened to his accompaniment for G.N.B. in many concerts. I have only known him as a disciple of Palakkad Mani Iyer. Sivaraman continues to uphold the reputation of his Guru with great dignity. It is very heartening to see an artiste play superlatively and attain such heights and honours in the field of music alongside his high academic accomplishments. 

He has always shown great interest in exploring the artform innovatively, without departing from the boundaries of its traditional construct. A few years ago, he, along with some of his scientist friends developed the fibre-glass mridangam with which he performed concerts (https://www.facebook.com/615920434/posts/10158061520225435/ ). Recently he presented a series of lecture-demonstrations that will help even a lay-man understand the beauty and nuances of playing the mrudangam. All these initiatives play a major role in generating keen interest and appreciation for the art of mrudangam among listeners.

With respect to my art and my performances, he earnestly listens to the intricacies that I present. Let me recall a small anecdote to show his true enthusiasm when it comes to acquiring knowledge.
Once he willingly organized a concert of M.D.Ramanathan at Thiagaraja Sangeetha Vidwath Samajam in Mylapore. He insisted that I played for that particular concert. Although I suggested that some other artiste be arranged, Sivaraman was persistent and ultimately I did play that concert. As I played a special variety on the thoppi (left side drumhead), he stood nearby observing and enjoying my performance. 

On a later occasion he even requested me and took a mrudangam of mine. I even asked him, “When you have so many mrudangams of your own, why would you want one of mine?”
“No No! You have to please give me!” he said and selected one of my mrudangams and he performed on it. Apart from exhibiting his prowess and calibre in his own instrument, I could see his zeal and involvement in comprehending the artistry of vidhvans he admired and in understanding the characteristic features of their instruments. When four different atristes play on the same mrudangam -  it will result in four varying tonal qualities. I could perceive Sivaraman’s sincerity in his pursuit of realising the nature and aspects of all types of mrudangams. 

  • Ramanathapuram C.S.Murugapathy 





Saturday, September 14, 2019

மஹாலக்ஷ்மி

எனக்கு அது நஷ்டம் தான்; இடைஞ்சலும் கூட, என்றாலும் நீ அதையே செய். அது உனக்கு நல்லது என்பதால் மட்டுமல்ல, அது தான் சரி, நியாயம் என்பதாலும் கூட என்று சுயநலம் சாராது தர்ம நியாங்களைக் கைக்கொள்பவர் உண்டு. உறவுகளிடமும் அப்படித்தான்; நண்பர்களிடமும் அதுவே. எங்கள் குல தெய்வம் திரௌபதி - ‘தர்மராஜா’ என்பதாலேயோ என்னமோ, எங்கள் வீட்டில் வழக்கத்துக்குச் சற்று அதிகமாகவே அப்படி இருப்போம். அதனாலேயே நீ சொல்லு சரியாயிருக்கும் என்று பஞ்சாயத்துகள் மத்யஸ்தங்கள் முன்வைக்கப்படும். என் பள்ளி நாட்களில் சில ஆசிரியர்கள் தேர்வுத்தாட்களைத் என்னைத் திருத்தச் சொல்லும்போது, கடவுளே என் பேப்பர் அவன் கிட்ட போய்டக்கூடாது என்று வகுப்பில் வேண்டிக்கொள்வார்கள். தஞ்சை அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியின் ஹாஸ்டல் வாழ்க்கையிலும் பின்னர் வேலையிலும் வீட்டிலும் மஹாலக்ஷ்மியும் அதுபோலத்தான் பெயர் பெற்றிருந்தாள். மஞ்சூர் பள்ளி நாட்களைப் பற்றி மாதுவுக்கும் ரவிக்கும் தான் அதிகம் தெரியும். 


என் நினைவில் அட்டகட்டியே உள்ளது. அங்கிருந்து பேருந்தில் வால்பாறைக்குச் செல்வார்கள். என்றேனும் வாங்க முடிந்த ஆப்பிள் கேக் மாலாவுக்கு மிகவும் பிடிக்கும். என்னைத் தூக்கிக்கொண்டு சாதம் ஊட்டி வேடிக்கை காட்டிய நாட்கள். வீட்டுச் சுவற்றை ஒட்டியே சின்னதாய் ஒரு மெஸ். அதில் சமைப்பது பரிமாறும் பாத்திரம் தேய்க்கும் வேலைகள் எல்லாம் பாட்டி, அம்மா, மாது, மாலா ரவி மற்றும் நீலகண்டன் நீலாயதாக்ஷி தான். ரவி அங்கிருந்து ஒரு காப்பி என்று குரல் கொடுத்து, அம்மா சமையலறையிலிருந்து கொடுத்ததும் வாங்கி வந்து அவனே குடித்து விட்டுச் சிரித்தான் ஒரு முறை என்று அம்மா சொல்லுவாள். எனக்குக் கேலிபர்ஸ் போட்ட வயது. மெஸ்ஸின் மூலையில் ஒரு முறை தேன்கூடு இருந்தது. அதன் அடியில் ஒரு தட்டை வைத்தால் தேன் சொட்டும். மாலா ரொம்ப நல்லாயிருக்கும் என்றாள். பிறகு ஈரோடு வந்துவிட்டோம். மாலா கூடை பின்னுவாள். பழைய எக்ஸ்ரேவைச் சுரண்டியது போன்ற ஃபிலிமில் இந்தியன் இங்க், ப்ரஷ், நிப் வைத்து ஆடைகளுக்கு டிசைன் போட்டு சாயப்பட்டறைகளுக்குக் கொடுப்பாள். அங்கேயே வர்ணமேற்றும் வேலையும் உண்டு. நீண்ட மேஜையின் இருமுனைகளிலும் இருவர் நின்றபடி கட்டையை வர்ணத்தின் மீது தேய்க்கவேண்டும். தினம் மூன்று ரூபாய்கள். சாயமேற்றிய துணிகள் வெயிலில் உலர்த்தும் போது, வாரயிறுதிகளில் நான்கு மூலைகளிலும் கல் வைக்கும் வேலை ரவிக்கு, எட்டணா கிடைக்கும். 




அப்பாவுக்குத்தான் முதலில் நர்ஸிங் கோர்ஸ் பற்றித் தோன்றியது. அம்மா வேண்டாம் வேற எதுலயானும் சேக்கலாமே என்றாள். இன்னம்மை (அம்மாவின் அம்மா), “டீ... ஸ்வர்ணம் ரத்தமெல்லாம் தொடச்சுக்கிண்டாக்கும் இருக்கணும்... நமக்கொன்னும் வேண்டாம் அதெல்லாம்” என்றாள். ஹாஸ்டலில் தங்கிப் படிக்கவேண்டும் என்பதும் ஒரு காரணம். ஆனால், அப்பா மாலாவுக்கு எடுத்துச் சொன்னார். ‘கவர்ன்மென்ட் போஸ்ட்டிங் வரும், காலாகாலத்துக்கும் பென்ஷன் வரும், நமக்கோ சொத்துபத்து ஒண்ணும் இல்லை, நல்ல வரனும் பாக்கலாம்’

ஹாஸ்டல் வாழ்க்கை தான் கடினம் சமாளித்துக்கொள்ளலாம் என்று போனவளுக்கு அனைத்துப் பாடங்களும் ஆங்கிலத்தில் என்றொரு கஷ்டம் கண்முன்னே தெரிய வந்ததும் துவண்டாள். ஆனால், அடுத்த க்ஷணம் இந்தப் படிப்பை ஏற்றுக்கொண்டாகிவிட்டது எனவே என்னைத் தகுதிப்படுத்திக்கொள்வேன் என உறுதியேற்றாள். ‘ஸித்தார்த்த ஸித்த ஸங்கல்ப ஸித்தித ஸித்திஸாதனஹ’ என்று முன்னோர்கள் வாழ்த்தியிருக்க வேண்டும். பத்து பத்து வார்த்தைகளாக எழுதியெழுதி மீண்டும் மீண்டும் படித்து சாதகம் நடந்தது. கல்லூரி விழாவுக்கு தெருவை அடைத்து அவள் போட்ட கீதோபதேச ரங்கோலியைச் சுற்றி மருத்துவர்களும் மாணவிகளும் நின்று படமெடுத்துக்கொண்டனர்.

போஸ்ட்டிங் வரும் வரை, ஈரோடு சவிதா மருத்துவமனையில் இரண்டு வருடங்கள் போல வேலை. ஊருக்குத் திரும்பாத மாப்பிள்ளை, ஆஃபீசில் தூங்குவது, வேலைக்காரி-மச்சினி ஜோக்குகளில் மகிழ்ந்து பழகியிருந்த உலகத்தால் வகுப்பில் நர்ஸ் ஜோக் சொன்னவர்கள் என்னிடம் அடிவாங்கியதோடு ஐயையோ இனிமே பேப்பர் வேற இவன் கைக்குப் போகுமே என்று மேலதிகக்கவலையில் ஆழ்ந்தார்கள். அடுத்து அப்போலோ மருத்துவமனையில் பணி. வைஜயந்திமாலாவின் கணவர் டாக்டர் சமன்லால் பாலி அப்போலோவில் பார்த்துவிட்டு உன் போன்றவர்கள் இந்தப் பணியில் சிலரே. பம்பாய் ஹாஸ்பிடலுக்கு வந்துவிடுகிறீர்களா எனக்கேட்டார். 

கடலோரக்கவிதைகள் கடமை கண்ணியம் கட்டுப்பாடு படங்கள் வந்து சத்யராஜ் பிரபலமான நேரம், அப்போலோவில் ஷூட்டிங். அத்தனைபேரும் நடிகரை சுற்றியிருக்க கண்டுகொள்ளாமல் கடமையாற்றிய மாலாவைச் சுட்டிக்காட்டி அவங்களக் கூப்பிடுங்க என்றார். என்னம்மா ஒரு நடிகன் இங்க இருக்கேன் நீங்க பாட்டுக்கு உங்க வேலையப் பாக்கறீங்க என்று ஆச்சிரியப்பட்டதும் அதனாலென்ன? டாக்டர் மேனேஜர் டிரைவர்னு எத்தனையோ வேல.. ஒங்க வேல நடிக்கறது இதுல ஆர்வத்துக்கு என்ன இருக்கு என்று கேட்டுவிட்டு நகர்ந்துவிட்டாள். 

பிறகு கல்யாணம். சாம்பசிவ ஐயர் சிதம்பரத்தில் பிரபல ஜோதிடர். புலியூர் பாலு அவர் சம்பந்தி தான். பெண்ணை வந்து பார்த்ததும் நிச்சயத்துக்கு நாள் குறித்துவிட்டார். 87ல் ஈரோடு ராமசாமி சீரங்காயம்மாள் திருமண மண்டபத்தில் கல்யாணம். ‘கொடுவாயூர் மருதமுத்து சக்திவேல் வாசிப்பு ரொம்ப ஒசத்தி. அந்தக் கல்யாணவசந்தமும் பிந்துமாலினியும் இன்னிக்கெல்லாம் கேக்கலாம்’ என்று பல்லடம் வெங்கட்ரமணராவ் அறிமுகம் செய்தார். நாகைநல்லூர்க்காரா தான் சமையல்ல ஒசத்தி என்று சோமு மாமா அழைத்துவந்தார். நாட்டைக்குறிஞ்சியும் சாருகேசி ஷண்முகப்ரியாவும் ஜானவாசத்தில் அமர்க்களப்பட்டது. நாகைநல்லூர் ரசம் உறிஞ்சப்பட்டும் டம்ளர்களிலும் வாங்கிக் குடிக்கப்பட்டது. செஞ்சியில் இருந்து அப்பாவின் பெரிய சித்தப்பாவான தியாகராஜ ஐயர் வந்திருந்தார். எண்பது வயதில் கிணற்றிலும் குதித்து மேலேறி வருபவராக இருந்தார். ’கெணத்துத் தண்ணில குளிக்கலாம், ஆனா குளிச்சதும் அந்தக் கெணத்துத்தண்ணியையே கொஞ்சம் எறைச்சு ஒரு வாய் குடிச்சுட்டயானா புது எடம்னு ஒடம்புக்கு ஒரு காச்சல் சளி தொண்டக்கட்டு வராது. வெளில பட்ட தண்ணியே உள்ளயும் கொஞ்சம் போன ஒடம்பு அதுக்கு தோதா பண்ணிக்கும்’ என்றார். மாலா கல்யாணம் முடிந்து ஐந்து நாட்களில் கும்பகோணத்தில் மாது கல்யாணம். ஈரோட்டில் ரிசப்ஷன் முடிந்து எங்க சின்ன ராசா பார்த்தோம். போஸ்ட்டிங் வந்தால் சென்னைதான் என்பதால் அத்திம்பேருக்கு சிதம்பரத்திலிருந்து அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலைக்கும் ஏற்பாடானது. VRS வாங்கி கல்யாணத்தை முடித்துவிட்டு ஈரோடு Prompt Courier Service-ல் administrative officer ஆகப் பணிபுரிந்தார் அப்பா. 

"அவர் சூப்பரா சமைப்பார். நான் நாலு பேருக்குன்னா சமைச்சுடுவேன் அதுக்கு மேலன்னா அளவு கொஞ்சம் தடுமாறும்..

எட்டு பேருக்குன்னா நீ ரெண்டு வாட்டி சமச்சுடு", என்றேன். 


பெரம்பூர் திரு வி.க. நகர் அருகில் சிவலிங்கம் தெருவில் ஜாகை. நான் சென்னை வந்தால் அங்கு தான் தங்குவேன். மாதத்தில் சில நாட்கள் சாம்பசிவ ஐயர் சென்னை க்ளையண்ட்களை அங்கு தான் சந்திப்பார். எம்.எஸ். பாஸ்கர் அடிக்கடி வருவார். சிவாஜியோட மேக்கப்மேன் ஒரு முறை என்ன தான் நீங்க நடிப்புக்கே ராஜாவாயிருந்தாலும், என் குடைக்குக் கீழதான் நீங்க என்று சொல்லிவிட்டார் போன்ற கதைகள் கேட்கக்கிடைக்கும். 

89ல் என் பொருட்டு எல்லோரும் ஈரோட்டிலிருந்து சென்னை வந்துவிட்டோம். அப்பா வழி சொந்தக்காரர்கள் பெரும்பான்மையாக திரு வி. க. நகரில் தான் இருந்தனர். எதற்கு எந்த டாக்டரைப் பார்ப்பது, GHல் எந்த மருத்துவரைக் காண எப்போது OP, இந்த மாத்திரைக்கு பக்க விளைவுகள் என்ன, இந்த ஊசி போட்டுவிடறீங்களா என்று வீட்டுக்கும் உறவினர்களுக்கும் சுற்றியிருப்பவர்களுக்கும் ஒரு தேர்ந்த நர்ஸ் இருப்பது சௌஹர்யமானது. ப்ராம்ப்ட் கூரியரின் சென்னை கிளையை அத்திம்பேரும் நீலகண்டனும் பார்த்துக்கொண்டனர். 

கேஸ் விஷயமாக ஈரோட்டுக்கு அப்பா இரவுப் பயணம். பேருந்தில் முன்னிருக்கையின் அடியில் கால்களை நீட்டிக்கொண்டு அனைவரும் நன்கு உறங்க சேலம் அருகில் ஒரு T ஜங்க்‌ஷனில் வேகமாய் வந்த லாரி பேருந்தில் மோதி, அத்தனை இருக்கைகளும் கீழே இறங்க, அத்தனை பேருக்கும் காலில் கடுமையான எலும்பு முறிவு. அதற்குப் பிறகு எத்தனையோ ஏற்ற இறக்க பெரும் பள்ளங்கள். எல்லா நேரங்களிலும் பெற்றோர்களுக்கு மாலாவின் மாரல் சப்போர்ட்டும் உதவிக்கரமும் இருந்துகொண்டேயிருந்தது. 


’பிராமின்ஸ் பொண்ணுங்களுக்கெல்லாம் இருவத்தெட்டு முப்பதுல தான் கல்யாணம் ஆகுது. நீங்க இருவதுலயே நல்ல எடமா பாத்துட்டீங்க..’ க்ருத்திகாவுக்குக் கல்யாணமாகிப் பெண் குழந்தை, ஓமந்தூரார் மல்ட்டி ஸ்பஷாலிட்டி மருத்துவமனையில் nursing superintendent, கொஞ்ச நாளாவது ஓரளவுக்கு தாராளமா இருக்கற வீட்டில் இருக்கணும்னு பம்மலில் அப்பாசாமி ஃப்ளாட், அருணுக்கு வரன் பார்த்துக் கல்யாணம், சென்ற ஏப்ரலில் பணியிலிருந்து ஓய்வு, அருண் அபிநயாவுக்கு நாலு மாதப் பெண்குழந்தை என 2016 ஜனவரியிலிருந்து இருந்து 2019 ஆகஸ்ட் முடிய பரபரப்பாய் போனது நாட்கள். 

சென்ற ஆகஸ்ட் இருபது முதல் அப்பாவின் உடல்நிலை சரியில்லை. அதே மாதக் கடைசியிலிருந்து மாலா அனீமிக்காக இருந்தாள், மூச்சு விடுதல் இன்னும் சிரமம் ஆனது. க்ளோபல் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் வென்ட்டிலேட்டர், பிறகு டிஸ்சார்ஜ் செய்துகொண்டு மாம்பலம் பப்ளிக் ஹெல்த் சென்ட்டரில் சேர்த்து செப்டம்பர் ஏழு எட்டு தேதிகளில் நல்ல முன்னேற்றம், ஒன்பதாம் தேதி டிஸ்சார்ஜ் என்று இருக்கையில், அன்று மதியம் காய்ச்சல். மீண்டும் ஆக்ஸிஜன். பதினோராம் தேதி இரவு பத்தேமுக்காலுக்கு ஐம்பத்தொன்பதாவது வயதில் அவள் இவ்வுலகம் நீங்கினாள்.

கண்ணு முன்னாடியே போய்ட்டாளேடா என்று பெற்றோரும் கணவரும் குழந்தைகளும் அழ, க்ரோம்பேட்டை மயானத்தில் சாம்பலானாள். இப்ப நமக்கு இன்னும் நிறைய இடம் கிடைச்சிருக்கு என்று எவரும் மகிழாத வெற்றிடம் அது. அந்த வெற்றிடம் இனி ஒரு போதும் நிரம்பவும் செய்யாது. 

Saturday, April 15, 2017

T.K.மூர்த்தி – காலத்தின் பொக்கிஷம்

(சென்ற மார்ச் மாதம் வலம் இதழில்  பெருங்கலைஞரான மிருதங்க மேதை ஸ்ரீ டி.கே.மூர்த்தி அவர்களைப் பற்றி வெளிவந்த கட்டுரை).




இரண்டு கைலயும் வாசிப்பிங்களா?

இல்ல பத்து விரல்லயும்

என்ன வித்யாசம்?

பத்து விரல்களும், நாலு யுனிட்டா, மூணு யுனிட்டா, ரெண்டு யுனிட்டா, ஒரே யுனிட்டா, ஒரே விரல் மட்டும்… இப்படியெல்லாம் பிரிஞ்சு வாசிக்கும். உதாரணமா, ஒரு தனி ஆவர்த்தனத்தோட க்ளைமாக்ஸ்ன்னு வெச்சுக்குங்களேன், அப்ப வலது கைல நாலு விரல், இடது கைல நாலுவிரல் சேர்ந்து, ஒரே நேரத்துல ரெண்டு பக்கமும் தித், தாம் கிட-ன்னு ஆரம்பிக்கும்.

ஓ.. பொதுவாத் தெரிஞ்சுக்கறத விட, இன்னும் நுணுக்கமா இருக்குன்றீங்க.

ஆமாம். நிறைய இருக்கு, ஆனா ஸங்கீதம் பாருங்க; பாடற விஷயத்த பேசினாலே கொஞ்சம் தான் புரியும், எழுதினா சொல்லவே வேணாம்.

அப்ப, இசை, இசைக் கலைஞர்களப் பத்தியெல்லாம் படிக்கும் போது இதுலேந்து ஒண்ணும் புரியாதுன்னு நெனச்சுகணுமா

அப்படியில்ல, இதுல சொன்னது, நமக்கு புரிஞ்சது போக, இன்னும் நிறைய இருக்குங்கற ஞாபகத்தோட படிச்சா சொன்னா எழுதினா போதும்
J




அவர் சற்று உயரம் குறைவாக இருந்தார். மேடையில் அமர்ந்து, இருகைகளையும் மூன்று யுனிட்டுகளாகக் கொண்டு, வாசிக்கவே கடினமாகத்தோன்றும் ’நம்,கிடதக தின்,கிடதக தின’ என்ற சொல்லை அதிவேகமாய் ஒரே கையின் வெறும் மூன்று விரல்களால் போட்டதும் நான் ப்ரமித்தேன். என் சிறுவயதில் முதன்முதலில் ஈரோட்டில் அவர் கச்சேரி கேட்க, முன்னதாகவே பந்தலில் சென்று அமர்ந்திருந்த போது, என் சீனியரான சீனிவாசன், ‘மூர்த்தின்னு அவர் பேர வெறும்ன கூட சொல்லக்கூடாது. மூர்த்தி சார்னு தான் சொல்லணும். என்ன கணக்கெல்லாம் வாசிப்பார் தெரியுமா’ என்றான்.

தா,,,,,, தீ,,,,,, கி,,,,,, ண,,,,,, தொம்,,,,,, என்று நீண்ட கார்வைகளில் ஆரம்பித்துக் குறைத்துக்கொண்டே வந்து அது ’ததிகிணதொம் ததிகிணதொம் ததிகிணதொம்’ என்று ஆதி தாளத்தின் கடைசி மூன்று அடியில் விரலுக்குவிரல் வந்ததும்  தான் அது கண்ட கதி என்றே தெரிந்தது (கண்டம் என்றால் ஐந்து. ஐந்தைந்தாக வாசிப்பது கண்டகதி, தகதகிட தகதகிட என்பது போல்).

அவர் ’தரிகிட கிடதக தாத் தொம்’ என்று மூன்று முறைகள் வாசித்து ஒரு தீர்மானம் வைத்தால் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று கேட்கும். அத்துணை பளீரிடும் தெளிவு, எந்த சொல்லாயினும். இருபது வருடங்களுக்கு முன் வாணிமஹாலில் சேஷகோபாலனுக்கு அவர் வாசித்த கச்சேரி இன்றும் நினைவில் உள்ளது. முக்கிய காரணம், அன்று நகுமோமு கனலேனியை ஆரம்பிக்கும் பொழுது காலப்ரமாணம் 72 pulses per minute. (RPM போல ஒரு நிமிடத்திற்கு எத்தனை துடிப்பு/தாளத்தின் விரல் எண்ணிக்கை என்ற கணக்கு). பிறகு ஒரு மணி நேரத்துக்கும் மேல் அசாத்ய சங்கதிகளுடன் அந்தப் பாடல், கீழ்க்கால மேல்க்கால ஸ்வரங்கள் முடிந்து தனியாவர்த்தனம் வாசித்து முடித்து மீண்டும் பாடலின் முதல் வரியை எடுக்கும் போது அதே 72. அத்துணை காலப்ரமாண சுத்தம்.

இயல்பான மனித உள்ளம் கால ஒழுங்கை சீராக ஆரம்பித்த வேகம் போலவே இறுதிவரை தக்கவைக்க மிகவும் ப்ரயத்தனப் படவேண்டும் (அனேகமாக முடியாது என்பதன் இடக்கரடக்கல்). ஆரம்பித்ததில் இருந்து கொஞ்சமாகவோ நிறையவோ ஓடிவிடும் (வேகம் அதிகரித்துவிடும்) அல்லது இழுத்துவிடும்(குறைந்துவிடும்). அது, வெகு சிலருக்கே கைகூடும். அவ்வெகுசிலரில், மூர்த்தி மாமா ஒருவர். சென்ற ஜூன் 2016-ல், தன் 92 வயதில் அவர் வாசித்த கச்சேரியும் தனியும் அத்தனை சிறப்பு. ஸங்கீதமானது, நிறைய நிறைய ஞாபகமும், புத்தி கூர்மையும், விரலோ குரலோ மங்காத வித்தையையும், அனிச்சையாய் ஆனால் சரியான மற்றும் சிறப்பான முறையில் உடனுக்குடன் க்ரஹித்து, க்ரஹிக்கும் போதே மேலும் அழகு செய்து, பாட்டுடன் இணைந்து வினையாற்றும் பண்பு போன்ற தன்மைகளை இன்றியமையாததாகக் கொண்டது. எனக்கு இப்போதே எதை எங்கே வைத்தோம் என்று மறந்துவிடுகிறது. ஆனால், என் குருநாதர் ஸ்ரீ சிவராமன் சாருக்கு 82 வயதாகிறது; மூர்த்தி மாமாவுக்கு 93 ஆகிறது. அவர்களின் சுறுசுறுப்பும் விழிப்பும் லயம் வழிந்தோடும் கச்சேரிகளையும் கேட்டால் வாழ்வில் அவர்கள் கைக்கொண்ட ஒழுங்கு, சின்ன வயதிலேயே செய்த அசுர சாதகம், எடுத்துக்கொண்ட கலையே மனமாயிருத்தல் என நம்மை வியக்க வைக்கும், நாம் கற்கவேண்டிய பாடங்கள் ஏராளம்.
Thanjavur Shri Vaidhyanatha Iyer - Palakkadu Shri Mani Iyer - Shri T.K.Murthy-
Umayalpuram Shri K.Sivaraman Sir - Kanjira Shri V.Nagarajan

மிருதங்கக் கலையின் தந்தை எனப் போற்றப்படும் தஞ்சாவூர் ஸ்ரீ வைத்யநாத ஐயரவர்களின் சிஷ்யருள் மிகுந்த புகழும் ஸ்தானமும் அடைந்தவர்கள் என பாலக்காடு ஸ்ரீ மணி ஐயர், ஸ்ரீ T.K.மூர்த்தி, என் குருநாதர் ஸ்ரீ உமையாள்புரம் K.சிவராமன், கஞ்சிரா ஸ்ரீ V.நாகராஜன்  என பலரைச் சொல்லலாம். முதல் மூவருமே ஸங்கீத கலாநிதிகளும் கூட. ஆகஸ்ட் 13, 1924ல் தாணு பாகவதர்-அன்னப்பூரணி அம்மையாரின் மகனாக திருவனந்தபுரத்தில் பிறந்தார் மூர்த்தி. அவர் தமையனார் கோபாலகிருஷ்ணன் லய வித்வான் என்பதால், காதுகளின் கண்களின் வழியே தன்னையறியாமல் லயம் உண்டு வளர்ந்தது சிறுவனின் மனம்..

முதலில் பாட்டு தான் பயின்றார்
. பள்ளி விழாக்களில் தன் நண்பனான செல்லமணியுடன் (பாடகர் ஹரிஹரனின் தந்தை) பாடுவது வழக்கம். ஆனால் விரல்கள் ஸ்லேட்டில் வாசித்து வாசித்து அடிக்கடி உடைந்து போனதை கவனித்த ஆசிரியர் ஒரு விழாவில் ’செல்லமணி பாடட்டும்; நீ மிருதங்கம் வாசி’ என்று சொல்லிவிட்டார். அன்று அங்கு வந்திருந்த ஸ்வாதித் திருநாள் மஹாராஜா அவ்வாசிப்பில் மகிழ்ந்து யாரிடம் பயில்கிறாய் எனக்கேட்க, ’யாருமில்ல நானே வாசிக்கறேன்’ என்றார். மஹாராஜா ஒரு தங்க மெடல் பரிசளிக்கிறார். மூர்த்தியின் தந்தை எதையோ உணர்ந்து மூன்று ரூபாய்க்கு (இப்பொழுது வாங்கவேண்டுமென்றால் பதினைந்தாயிரம் ஆகும்) ஒரு மிருதங்கத்தை வாங்கித் தருகிறார். இந்நிலையில் ஒரு முறை, தஞ்சாவூர் ஸ்ரீ வைத்யநாத ஐயர் முன்னிலையில் வாசிக்க நேர்கிறது.

நல்ல கையும், பரிமளிக்கக்கூடிய அம்சங்களும் தென்பட்டால் அவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டுகொண்டு பின்  ஸ்புடம் போட்டு மின்ன வைக்கும் பேராற்றல் வாய்ந்த வைத்யநாத ஐயரவர்கள், ஒன்பது வயதான மூர்த்தியைத் தன் தத்துப் புத்திரனாகவே தஞ்சைக்கு அழைத்து வருகிறார். ‘அப்பவே கேட்டார்; இன்னும் ரெண்டு மாசம் ஆகட்டும்னு அம்மா சொன்னா. அந்த ரெண்டு மாசத்துல என்னோட அம்மா காலமாயிட்டா. அப்பா என்னை வைத்தா அண்ணாவாத்துல விட்டா’. அவரை விட பன்னிரு அகவைகள் மூத்தவரான பாலக்காடு மணி ஐயர் அச்சமயம் அங்கே பயின்று வந்தார்.
இரு வருடங்கள் கழித்து, தன் பதினோராவது வயதில் குருவுடன் சேர்ந்து துக்காராம் படத்துக்காக கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் பாடிய முசிறி ஸ்ரீ ஸுப்ரமண்ய ஐயருக்கு வாசிக்கிறார். பிறகு மைசூர் சமஸ்தானத்தில் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் கச்சேரியில் சௌடய்யா வயலினுடன் குரு ஸ்ரீ வைத்தா அண்ணா வாசிக்க, மூர்த்தியும் உடன் வாசிக்கிறார். சிட்டு என்று செல்லாமாக அழைக்கப்பட்ட மூர்த்தியின் வாசிப்பில் மகிழ்ந்து மைசூர் மஹாராஜா அந்நாளில் ஆயிரம் ரூபாய் சன்மானம் தருகிறார். அதோடு, தேர்ந்த பக்கவாத்தியக் கலைஞனாக தனியே இவர் வாசித்துக் கேட்கவேண்டும் என்ற ஆவலில் மறுநாள் ஒரு கச்சேரியை ஏற்பாடு செய்து கேட்டு உவந்து அன்றும் ஆயிரம் ரூபாய்கள் வழங்கினார். பதினைந்து வயதில் மாஸ்டர் மூர்த்தி என்ற பெயர் ஸங்கீத உலகில் வ்யாபிக்கிறது.



ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிலிருந்து அரியக்குடி, செம்பை, ஆலத்தூர், மதுரை மணி, ஜி.என்.பி., மாலி, எம்.எஸ்., மேண்டலின் என்று அவர் பக்கவாத்யம் வாசித்த உன்னதக் கலைஞர்களின் பட்டியல் வெகு நீளம். ஒரு முறை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி வைத்தா அண்ணாவின் இல்லத்துக்கு வர, ’இது யாரு தெரியுமா, ரொம்ப நன்னா வாசிப்பான்’ என்று அறிமுகப்படுத்தி அன்று மாலை வீட்டிலேயே ஒரு கச்சேரியை நடத்தினார் வைத்தா அண்ணா. அதன் பின் ஐம்பத்தைந்து வருடங்கள் மூர்த்தி தொடர்ந்து எம்.எஸ்ஸுக்கு வாசித்திருக்கிறார். UNO-வில் வாசித்திருக்கிறார்.  அந்நாளில் பெண்களுக்கு வாசிப்பதில் இருந்த மனத் தடைகளைக் கடந்து D.K. பட்டம்மாள்,  M.L. வசந்தகுமாரி, K.B. சுந்தராம்பாள், பிருந்தா-முக்தா எனப் பலருடைய கச்சேரிகளையும் தன் வாசிப்பினால் அலங்கரித்திருக்கிறார்.
                   


குரு சிஷ்ய பரம்பரை என்று எடுத்துக்கொண்டால், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் – ராமனாதபுரம் சங்கர சிவம் – மதுரை T.N. சேஷகோபாலன் - நெய்வேலி சந்தானகோபாலன் – ஸ்ரீராம் பார்த்தசாரதி என்று ஐந்து தலைமுறைக்கு வாசித்த பெருமையையுடையவர். அவரின் கச்சேரி அனுபவத்துக்கே இப்போது ஸதாபிஷேகம் ஆகிவிட்டது. ’நாங்க எல்லாம் அப்புறம் நிறைய மாத்திண்டோம், (தனக்கென ஒரு பாணி உருவாகி வந்ததைச் சொல்லுகிறார்)ஆனா மூர்த்தி வாசிப்பு இன்னைக்கும் அண்ணா (ஸ்ரீ வைத்யநாத ஐயர்) சொல்லிக்குடுத்ததெல்லாம் அப்படியே இருக்கும்’ என்று மணி ஐயர் ஒருமுறை பேசியதாக மூத்த கலைஞர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். லய ரத்னாகர, ம்ருதங்க பூபதி, தாளவிலாஸ், சங்கீத நாடக அகாதமி, ஸங்கீத கலாநிதி என்று விருதுகளின் நீண்ட வரிசைக்குச் சொந்தக்காரர் மூர்த்தி அவர்கள்.



மனோபலம் மிக்கவர். தொண்ணூறுகளில் ஒரு கச்சேரியில் வாசித்துக்கொண்டிருக்கும்போது ஸ்ட்ரோக் வந்து, வலது கையும் காலும் ஸ்வாதீனமில்லாமல் போயிற்று. ஆபரேஷன் செய்யவேண்டும் எனக்கூறிய நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தியிடம், ’டாக்டர்… நான் ம்ருதங்கம் வாசிக்கறத்துக்குத்தான் பொறந்தேனேயொழிய, சாப்டுட்டுத் தூங்கறத்துக்கில்லை. நான் வாசிக்கமாட்டேன்னு உங்களுக்குத் தெரிஞ்சுடுத்துன்னா, என்ன அனுப்சிருங்கோ… நான் போறத்துக்கு ரெடியா இருக்கேன். நான் கவலப்படலேன்னேன்’ என்றார்.
அதன்பின் மனம் தளராது சில மாதங்கள் பயிற்சிகள்; பிறகு அதே கம்பீரமாய் வாசித்துக்கொண்டிருக்கிறார். அவ்வளவு நேசம் தன் கலையில்.


மூர்த்தி மாமாவின் பேச்சு அலாதியான ரசிப்பும் போலச் செய்தலும் கிண்டலும் அன்பும் நிறைந்தது. ஒரு முறை சென்ட்ரல் ஸ்டேஷனில் வந்து இறங்கிய போது மழை பெய்துகொண்டிருந்தது. ஆட்டோக்காரர்அதையே காரணமாகச் சொல்லி அதிகம் பணம் கேட்டார், இவரும் ஏறி அமர்ந்துவிட்டார். ஸ்டார்ட் செய்யக் குனிந்த நேரம், ‘இரு… மழை விடட்டும்’ என்றார். எக்மோரில் நிறைய பணம் கேட்டவரிடம், ’நீ என்ன கொண்டுவிட்டா போறும்; திருப்பியும் இங்க கூட்டிண்டு வரவேண்டாம்’.


அவருக்கு சிஷ்யர்கள் ஏராளம். ம்ருதங்க தத்வம் என்ற கருத்துருவாக்கத்தின் முயற்சியாய் அவருக்கும் முன்பிருந்த மேதைகள் பற்றியும் தஞ்சாவூர் பாணி என்பதனை உலகெங்கும் மூர்த்தி அவர்களின் பார்வையில் கூறியும் வாசித்தும் ஆவணப்படுத்தியுள்ளனர். நான் முதல் முதலாய் வாங்கிய தனியாவர்த்தன கேஸட் இவருடையது தான். அதில் கொன்னக்கோலும் சொல்லியிருப்பார். அதிலும் அவர் வித்தகர். கடம் கஞ்சிராவும் வாசிப்பார். 35 தாளங்கள், 108 தாளங்கள் என்று பலவித தாள அமைப்புகளுக்கும் வாசித்துள்ளார். நிறைய கோர்வைகள் கம்ப்போஸ் செய்திருக்கிறார்.

குறிப்பு: கொன்னக்கோல் என்பது மிருதங்கத்தில் வாசிக்கப்படும் சொற்களை ஜதிகளாகச் சொல்லி, பாட்டுக்குப் பக்கவாத்யமாக சொல்லி இசைக்கும் கலை. நத்தின்தின்னா நணதின்தின்னா / தகதிமிதகஜணு என்பது போல.

நேற்று (Jan 25) பத்மஸ்ரீ விருது அறிவித்திருக்கிறது மத்திய அரசு. சந்தோஷம், நன்றி. ஆனால், மூர்த்தி மாமா அந்த நிலைக்கும் மேலே வந்து, எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. ஐம்பதிலிருந்து அறுபது வயதிற்குள்ளேனும் சரியான சமயத்தில் அவரவர் கலைகளையும் தாம் சார்ந்திருக்கும் துறைக்கு அவர்கள் அளித்த கொடையையும் அங்கீகரித்து விருது வழங்கவேண்டும். பிறகு இன்னும் சற்று வயதான பின், அதற்கும் மேலுள்ள பத்மபூஷன் பத்மவிபூஷன் விருதுகளை அளிக்கட்டும் பரவாயில்லை. விருது பெற்ற அன்றோ, அதற்கடுத்த நாளோ அவர்கள் அங்கே வாசிப்பதாய்க் கொள்ளுவோம். தன் கலையின் சிறப்புகளை முழுவதுமாய் வெளிப்படுத்தும் உடல்-மன நிலையுடன் அவர்கள் இருந்தால் தன் கலையை அங்கே நிகழ்த்துபவருக்கும் கேட்பவர்களுக்கும் எத்தனை ஆனந்தம். பருவத்தே பயிர், காலத்தினால் செய்வது, ஞாலத்தின் மாணப் பெரிது என்பதையெல்லாம் தருண்விஜய் போன்றோர் தானும் பயின்று அரசுக்கும் எடுத்துச் சொல்வாராக. நான் ஹிந்தி கற்றுக்கொண்டு மோடியிடம் பேசி முறையிடுவதை விட அது எளிது.




(நன்றி: அவர் வாசிப்பையும் பேச்சையும் கேட்டு அனுபவித்ததனால் எனக்கும், மூர்த்தி மாமாவின் பத்திரிகைப் பேட்டிகளுக்கும், யுட்யூபுக்கும். T.K.Murthy, Mridanga Tatvam என்று கூகிள் செய்து அவர் வாசிப்பின் துளியை நுகரலாம்)
                                                                             
-ஈரோடு நாகராஜன்

Wednesday, March 16, 2016

“A Spring that made many hearts blossom”


“shAnthA mahAnthO nivasanthi santhO
vasanthaval-lOkahitham charanthaha |
theerNaa: svayam bheemabhavArNavam janA-
nahEthunAnyaapi thaarayanthaha ||”


“There are saints on this earth —
silent and great —
who, like the Spring season,
bring about the well-being of the world.”


I was reading and recording “Adhi Sankarar aLikkum AchArya lakshaNam” – Sankara charitham, part-5 from dheivathin kural, a month ago and I had no idea that the slOkam is actually a clear indication of the assurance by the divine grace to shower its blessings for vandhE guruparamparAm. I received an Agnai (आज्ञा) from shrI bAla periyavA on November 10th to organise a concert for mahA periyavA ArAdhanai by first week of January. From that day onwards, I have been trying to organise one. The artistes were in India for December music festival then. So I thought of arranging it by the end of January or first week of February, but the kids had to gear up for thyAgaraja ArAdhana followed by exams, projects and assignments. I decided I should not leave without carrying out the divine order.  The day I should leave to India was nearing.

On February 25th I was able to finalise the date and venue when the second Sunday of March seemed convenient for everyone. Things started to shape up on its own.

I designed an invitation on 27th February morning and was thinking in mind, ‘periyavA… this is the approximate invitation. How am I going to keep it in your lotus feet, in adhishtAnam and take blessings of you before I share this to everyone?’ In five minutes (27th night in Chennai) I got a message from none other than Gayathri Venkataraghavan, “Hi Nagaraj… I may go to kAnchipuram early morning tomorrow, will offer a bilva mAlai on behalf of you, vERa enna sollaNum?” I sent her the invitation. When I connected my mobile to WiFi after a few classes that evening (early morning of 28th in Chennai) my WhatsApp blinked. My friend S. Hariharan and my sishyA Giridharan had sent me messages that they are on their way to kAnchipuram and asking me, if I need to convey anything to periyavA.

I remembered the smile of mahA periyavA saying, ‘whenever you wonder that something beyond your capacity is happening, realise, it is the divine entity with you makes it happen’.

True. This program is one among thousands of such realisations and when the date 13th March was finalised, it was a sweet surprise to know it is “Spring break” here. lOka hitham charanthaha… ahEthunA… without expecting anything in return the spring blossoms every life and so is “guru”. It was a combination of bAla periyavA jayanthi and kAradaiyAn nOnbu-gowri vratham too. To add to the bhAgyam of all of us, shrI bAla periyavA had given (on January 25 to charaN-dheepikA during their India trip) a big packet of ‘kunkumam’ which HE had held in HIS own hands doing japam, blessed and had instructed me to give it to devotees (varavaaLukku avan kaiyaalayE kudukka chollu) for their manObheeshta siddhi.

With the extended support of Smt.Rajarajeshwary Bhat and Shri Vittal Ramamurthy we were able to present the concert involving more than 50 kids and eminent young vibrant musicians singing various krithis mainly on guru and kAmAkshi. ‘guru moorthE thvAm namAmi kAmAkshi’ says mookha Sankara in AryA Shathakam (46-mookha panchashathi)
(kuNDali kumAri kuTile chaNDi charAcharasavitri chAmuNDe |
guNini guhAriNi guhye gurumUrte tvAM namAmi kAmAkShi ||)


Smt. Krishnaveni Hebbar, Smt. Rajarajeshwary Bhat, Vittal Ramamurthy, Smt. Shrimathi Gopalan and myself lit the kuththuviLakku followed by gaNanApathi dhyAnam, mEdhA sUktham and a little ganam by Abhijith Venkat and Girish Venkat. I spoke for a few minutes about periyavA and the objective of the function and welcomed the gathering.

Commencing the concert with bhAjagOvindham sounded very appropriate as the theme was “vandhE guruparamparAm”. When there are more than thousand names of vishNu, shrI Sankara chose gOvindha nAma, since HIS guru was gOvindha bhagavathpAdha and the song also served a fitting tribute to Smt. M.S.Subhalakshmi’s centenary celebrations. The kids sang the songs 2,3&5 with great sincerity and devotion while ravi muthurajan, a disciple of udaiyALoor kalyANarAman sang the nAmAvaLi (4).

It was time for the young violinists to play now. garudadhvani varNam of lAlgudi mAmA on shaNmukha followed by brochEvArevarE in which the saint composer pleads ‘bhavAbdhi tharuNO pAyamu lErani’ ‘rAmA.. who else can hold my hand and save me from the ocean of birth and death and lead me to attainment?’ The lyrics perfectly echoing with theerNaa: svayam bheemabhavArNavam janAn, words of Adhi Sankara. That was followed by the thillAnA in mANd – ‘sakala uyirkkum annai neeyandrO.. aruL kAnchi kAmAkshi’

Kruthi rendered the theme slOkam sadhASiva samArambhAm and shrI shankara guruvaram.

[cintayAmi - I meditate (upon)
shrI shankara guruvaram - Shri Shankaracharya, the best of Gurus
bhava haram - the destroyer of Samsara

A: sAshanka ratipati bANa jAla - (to) the bunch of arrows of Manmatha, sent with trepidation
tUla kAlAnalam - (he is as) the cataclysmic fire to cotton wool

C: ajnAna timira taraNim - (he is the) Sun to the darkness of ignorance
angIkrta shruti saraNIm - he validates the path of the Vedas
su-jnAna sukha karaNim - he causes the joy of pure knowledge
sUkSma praNavAraNim - he is the flintstone that ignites the subtle consciousness
(thanks to Rajani of rasikAs org for translation)]


SyAmA sAsthri’s bhairavi svarajathi reverberated with vibrant singing by Smt.Rajarajeshwari, Kruthi Bhat, Keerthana Bhat, Pavani and Varshitha. It was time to sing a few compositions of shrI jayEndhra periyavA and Deepika sang karuNa rasa poorNa and eppadi pAdinarO followed by nAmAvaLi and nadamAdum dheivam by Ravi Muthurajan. Kruthi sang praNadhOdhAraNa in kApi, Deepika sang thOtakAshtakam and the concert concluded with maithreem bhajatha.

The percussion section contributors along with me were Charan Rajan (disciple of shrI UKS Sir) and my sishyAs Pranav Krishna Ramasubramaniam (Omaha) and Chandrakaanth Ramamurthy (Pearland).

A book ‘shrI kAnchi mahA periyavA’ along with the kunkumam shrI bAla periyavA had blessed and a mysore paagu were given as gift to all 50+ students. The main artistes Smt. Rajarajeshwary Bhat and Shri Vittal Ramamurthy were honoured. They were kind enough to cheerfully take part and had also trained number of students for this concert. A photo of mahA periyavA with kunkumam was given to everyone who had attended. A photo of kAmAkshi, kunkumam and a small gift were given to volunteers. Some prasAdhams were sent to people who had RSVP but couldn’t attend for some reasons.

We had hardly 15 days to decide, organise, meet people, fix venue, train the students and conduct the event in a satisfying manner. Thanks to all the 170+ people who attended and made it a grand offering in such a short notice. Thanks a ton to all who contributed to the event and all volunteers who helped in stage decoration, audio-video, dinner prasAdham, fruits, flowers and essentials. We thank the committee of Ashtalakshmi Temple for providing the venue with a nominal charge.


There are 360 degrees in a full rotation and that is going to be the number of days I spent in the US during this visit too. 360 days! A complete and comfortable stay in the US all these days and what I take home will be the affection, care and concern each and every one showered on me. I will miss you all. See you soon.

                                  ~vandhE guruparamparAm~


Monday, June 29, 2015

Kodumudi in Texas






முடிவெட்டிண்டதுக்கெல்லாம் ஒரு போஸ்ட்டா, இதெல்லாம் ஒனக்கே ரொம்ப ஓவராத் தெரியலயா என்ற ஆழ்மனத்தின் குரலோசை Alt+2 (NHM) அழுத்தும்போதே கேட்கத்தான் செய்தது. ஆனால் சலூன் என்கிற ஆணுலகை, சிறுவயதின் மிஷின் கட்டிங் அச்சங்களை, பதின்பருவ ஞாயிறுகளை இரு மாதத்திற்கொருமுறை கிளர்ச்சியாக்கவென்றே காற்றில் படபடத்த காலண்டர் (பிரித்துப்படித்து இன்புறவேண்டாம்) பக்கங்களை, படிக்கவேண்டிய செய்தித்தாள்களும் புத்தகங்களும் நுரை துடைக்கவும் நடுப்பக்கம் பார்க்கவும் மட்டும் பயனுறும் விந்தையை, பையனை அமரவைத்து ‘ஒட்ட வெட்டி வெச்சுரு.. இந்தா வாரேன்’ என்று சொல்லிவிட்டு சைக்கிளில் விரையும் அப்பாக்களை எல்லாம் பிரிந்து, கத்திரி சப்தம் காதில் விழும்போதே கண்ணாடியில் முகம் தெரிந்து இருபது வருஷங்கள் ஆகிவிட்டதால் ’எழுதேன், பரவாயில்ல’ என்று அமெரிக்க அபார்ட்மெண்ட் சுவரான ப்ளைவுட்டில் என் முதுகை நானே மூன்று முறை இடித்துக்கொண்டேன், தட்டிக்கொடுக்க அருகில் யாருமில்லாததால்.

ஈரோட்டில் இருந்தவரை, அண்ணா தூக்கிச்சென்று விடுவான்; +2 படிப்பு வரை பள்ளிக்குச் சென்றதும் அப்படித்தான். 89 ஆகஸ்ட் இறுதியில் சென்னை திரு.வி.க.நகர் வந்ததும் முடிவெட்டிக்கொள்ளுதல் கடின கார்யங்களில் ஒன்றாயிற்று. கண்ணாடிக் கதவுகளில் சன் கன்ட்ரோல் ஃபிலிம் ஒட்டி,
‘இங்கெல்லாம் நாப்பது ரூபா கேப்பான்’ நடைபாதை ஏறி, படிக்கட்டுகள் தாண்டி உள்ளே சென்று சிந்திக்கிடக்கும் முடிக்குவியல்கள மிதித்துக் கடந்து உயரமான சுழல் நாற்காலிகளில் ஏறி அமரும் வித்தை ஏதும் கைவரப்பெற்றிருக்கவில்லை எனக்கு. எனவே, முக்கிய சாலைகளில் இல்லாமல் சந்துகளில் இருக்கும் முதியவர்களின் கடைகளில் நண்பர்களோ அண்ணாவோ ஃப்ரீயாக இருக்கும் பொழுது தலைக்கனம் குறைத்துவிடுவேன். பிறகு சில நாட்கள் எளிமையான வாழ்க்கை. இரு மாதங்களில் மீண்டும் செருக்கு சேர்ந்துவிடும். எப்போதும் வெட்டிவிடும் வேலு திடீரென உடல்நலக்குறைவால் இறந்துபோனார். ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அவர் மகன் பாரம் சுமக்கலானான். மாதமொருமுறை முடிவெட்டிக்கொள்ள வேண்டுமென முடிவெடுத்தேன்.

சென்னையில் எப்படியேனும் மாம்பலம் தி.நகர் அல்லது மைலாப்பூரில் குடியிருக்கவேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே இருந்தது. வீட்டுவாடகை ஏற்றங்களினால் அவ்வாசையைச் செயல்படுத்த எண்ணி ஆனால் சக்கரவியூகத்துக்குள் புகவியலாது சக்கரத்தின் ஓரமாக நகர்ந்து திரு.வி.க.நகர், கொளத்தூர் என்றிருந்த ஜாகை, வளசரவாக்கத்திலிருந்து வாள்வீசத் தொடங்கியது. அங்கு தான் முதன்முதலில் வீட்டின் பின்புறம் இருந்த குறுகலான இடைவெளியில், ‘முடி தான.. பரவாயில்ல பார்பர வரச்சொல்றேன் இங்கயே வெட்டிக்கோங்க, அப்புறம் பெருக்கிடலாம்’ என்று அன்பாய் உரைத்தார் வீட்டுக்காரர். அதன் பின்பு திரைப்படங்களில் பார்த்தது தான் சலூன். முடிவெட்ட வந்தவர் நாதஸ்வரமும் நன்றாக வாசிப்பார். எனவே சில பாடல்கள், ராகங்கள் என்று ஸ்வாரஸ்யமாய்ப் போனது பொழுது. ஆனால் பாட்டிலில் இருந்து காதுகள் சிலிர்க்கப் படரும் தண்ணீர், முகமும் பின்னந்தலையும் பார்க்க முடிகிற பெரிய கண்ணாடிகள், வேறு மனிதர்கள், என்றைக்கு எந்தப் படம் ரிலீஸ் என்று பேசுகிற தினசரிகள் எதுவுமற்று கடைசியாய் ஒருமுறை மட்டும் கையிலேந்திய சிற்றாடியில் முகம் பார்த்து, ‘இப்ப மூஞ்சி நல்ல்ல்லா இருக்கு பாருங்க’ சரியாகத்தான் இருக்கிறது என்று குளிக்கச்சென்றுவிடும் மகத்தான மனிதனானேன். சஹ மனிதர்களிடம் நம்பிக்கை கொண்டவன் மஹத்தானவனாகத்தானே இருக்கவேண்டும்.

கி.பி.  இரண்டாயிரத்தொண்ணில் மன்மத ஆண்டு (காமன் எரா) வியூகம் துளைத்துத் தி.நகர் மங்கேஷ் தெருவில் குடிபுகும் பாக்கியம் ஏற்பட்டது. அங்கு வடிவேல்.

‘வீட்டுக்கெல்லாம் வந்து வெட்ட மாட்டேன் சார்’

பணம் எக்ஸ்ட்ராவா தரேம்ப்பா

வாணாம் சார், கடய வுட்டுட்டு வந்துகினு பேஜாரு..

ஏம்ப்பா.. யாராவது வயசானவங்க, ஒடம்புக்கு முடியாதவங்க இருந்தா செய்யமாட்டியா. அது மாதிரி வெச்சுக்கோயேன்.

அது ஒரு தபா தான் சார். இது மாசாமாசம் தபாக்குதபா வரணுமே, கடய வுட்டுட்டு.

சரி பரவாயில்ல. உன்னப் பாத்தா நாலாம் நம்பர்ல பொறந்தா மாதிரி இருக்கு. ஆனா, ஒத்து வல்லியே..

ஸ்ஸார்! நாலாந்தேதி தான் பொறந்தேன் ஸ்ஸார்!! ஒங்க்ளுக்கு அதெல்லாம் தெரியுமா ஸ்ஸார்?

எல்லாம் நான் சொல்றேன், வா.

பிறகு வெஸ்ட் மாம்பலம் - சைதாப்பேட்டை - அஷோக் நகர் மூன்றும் சந்திக்கும் குழப்பமான நிலப்பரப்பிற்கு மாறும் வரை வடிவேல் நான்கு வருடங்கள் தொண்டாற்றினான்.


சென்னையின் பகுதிகளிலெல்லாம் கச்சேரி வாசிக்கவோ, கேட்கவோ, ஊர் சுற்றவோ அலையும் போதெல்லாம் எந்தக் கடையில் சாலை விளிம்பருகிலேயே தொலைபேசி இருக்கிறதென்று பார்க்கும் பழக்கமிருந்தது எனக்கு. செல்ஃபோன்கள் இல்லாத காலங்களில் அத்தியாவசிய சூழல்களில் வீட்டையோ நண்பர்களையோ அழைக்கவேண்டி கண்கள் குறிப்பெடுத்துக்கொண்ட காலம் அது. அக்னி நக்ஷத்திரம் படத்தில் ஜன்னலின் கண்ணாடியொன்றின் சில்லு பெயர்ந்து விழும் ஒரு காட்சிக்குக் குறியீடு ஏதுமில்லை, சும்மா தான் என்று மணிரத்னம் ஒரு பேட்டியில் சொன்னதைப் போல சலூன், துணிக்கடை, உணவகங்களின் மீது அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத போதும் ஒரு கண் இருந்தது எனக்கு.  இத்தனை மால்கள் வீல்ச்சேர் ஆக்ஸசுடன் வரும் வரை ஷாப்பிங்கில் எனக்குப் பெரும் ஆர்வம் இருப்பதை அறியாமலேயே தான் இருந்தேன்; அல்லது காஞ்ச மாடு கம்புல புகுந்தாற்போல ஒன்றாகவும் அது இருக்கலாம். அதுவரை படிக்கட்டுகள் இருந்த இடத்திற்கு ஒரு சாய்வுப்பாதை போடப்பட்டதும் அங்க ஒருநாள் போகணும் என்ற எண்ணம் வரிக்கப்பட்டுவிடுகிறது மமோபாத்த சமஸ்த துரித க்ஷயத்வாரா என்று ஸங்கல்பிக்காதபோதும், சல்லடை மனத்தில்.

2005-ல் (அங்கல்லாம் எப்டி சார் வெட்டிப்ப - வடிவேல்) மிஷிகன் வந்தபோது, ’வாங்கோ க்ரேட் க்ளிப்ஸ்க்கு அழைச்சுண்டு போறேன், ரொம்ப ஓஹோன்னு எல்லாம் நாம சொல்றபடி வெட்டமாட்டான், ஆனா தேவல’ என்று சொன்னதை மறுத்து, ‘இல்லல்ல.. ஊருக்குப் போயே வெட்டிக்கறேன். அதான் வரபோதே ஒண்ட வெட்டிண்டு வந்துட்டேனே’ என்று சொல்லி, ஆறுமாத மகசூலை மதராஸப் பட்டினம் அடைந்தபின்னரே அள்ளினேன். பிறகு, பல பயணங்கள் அதே போல் அந்நிய நிலத்தின் கத்திபடாமல் இதுவும் கடந்து போகுமென்று போனது.

இம்முறை க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனைக்காக விமானமேறுவதற்கு இரு தினங்களுக்கு முன் வியாழனுக்கும் ஞாயிறுக்கும் திதி தோஷமில்லை என்று தலையைக் கொடுத்ததில், சகட்டுமேனிக்கு தாத்தா விளையாடிவிட, சீப்பிலிருக்கும் பற்களைவிடக் குறைவான முடிகளே கூடுவாஞ்சேரிக்கு மிக அருகில் நிலம் போலக் குழுமியிருந்ததை உணர்ந்துகொண்டேன். ஃபேஸ்புக்கின் ப்ரொஃபைல் படங்கள், கச்சேரி ஃபோட்டோஸ் எல்லாம் டாலடிப்பதை நிறுத்த இரு மாதங்களாயின. வாஷிங்டன், க்ளீவ்லேண்ட், சேக்ரமெண்ட்டோ, க்யூப்பர்ட்டினோ, ஒமஹா என்று ஸ்வாமிகள் முகாம் போல மாறிமாறி இப்போது ஹ்யூஸ்டனில் இருக்கிறேன். இரண்டு நாட்களாக தலையில் எந்நேரமும் ஒரு பூனை அமர்ந்திருக்கும் உணர்வு. ’அடி மாங்கொளத்துக் கரை மேல... ஏ ஏஏ.... மயிருணத்தும் சின்னவளே ஏ.. மயிருணத்தும் சின்னவளே’, என்று எவரேனும் எசப்பாட்டு படித்துவிடும் அபாயம் அச்சுறுத்த, 90•F உஷ்ணம் ’K7 அல்ல நீ - .கேடிந்த oven’ என்று பாடியபடி நிலவெப்பமயமாதலுக்கு என் கழுத்திலிருந்து கான்ட்ரிப்யூஷன் எதற்கென்று Great Clips- ஐ கூகிளினேன்.

$20, 30 என்றெல்லாம் அதிர்ச்சியளித்த கடைகளை விடுத்து,

'அந்த ஹில்க்ராஃப்ட் போற வழில ஆறு டாலர்னு ஒருத்தன் போட்ருந்தானே, அங்க போலாம்’

“சார் அப்படியெல்லாம் யாரவேணா நம்ம்ம்பி ஒங்க தலையக் குடுத்துராதீங்கோ’

‘பரவால்ல போலாம் வா. முடி தான. கோணாமாணையா வெட்டினான்னா, வளந்தா சரியாப்போறது’





எல்டர்ஸ் ரிட்ஜ் சாலையில் வியட்நாமிஸ் நூடில்ஸ் கிச்சனின் அருகிலிருந்தது L&Y Salon. காரிலிருந்து இறங்கி வீல்ச்சேரில் எளிதாய் உள்ளே சென்றேன். அங்கிருந்த போஸ்டரில் ஐம்பது தலைகள் என்னைப் பார்த்து இதில் எந்தத்தலை உன்னுடையதாக ஆகப்போகிறதெனச் சிரித்தன. சுழல் நாற்காலியின் உயரத்தை எனக்கு வாகாக இறக்கி, மாறி அமர்ந்ததும் எப்படி என்ன விதமாய் வெட்டவேண்டும் எனப் பொறுமையாகக் கேட்டு, செய்யும் வேலையில் ஈடுபாட்டுடன் நிதானமாய்ச் செய்தார் அக்கலைஞர்.

இருபது வருடங்களுக்குப் பின் என் பின்னந்தலையைப் பார்த்தேன். பின்னங்கால் பிடரியில் பட ஓடியதேயில்லையாதலால் அடிகளேதுமின்றி எவரும் ரிட்வீட் செய்யாத உள்குத்துகளற்ற கீச்சு போல் 140-க்குள் இருந்தன எஞ்சியிருந்த முடிகள். வம்புகள் பேசாது திரைச்சுவை, வண்ணத்திரை, குமு-குங்கு-ஆவிகள், அந்தரங்கம் பகுதிக்கு கடிதங்கள் நிரம்பிய அந்த மாதிரிப் புத்தகங்கள் இல்லாமல் எம்மா வாட்சனின் ப்ளோ-அப் கூட இல்லாத வெற்றுச் சுவர்கள் சூழ்ந்திருக்க, Mr.Bean-ல் வருவது போல ஒரு பெரிய கண்ணாடியைத் தலைக்குப் பின்னே பிடித்துக் காட்டி, திருத்தங்களை இன்முகமாய் ஏற்று பத்து டாலர்கள் மட்டும் வாங்கிகொண்டு சிரித்தபடி வழியனுப்பினார். யூ விசிட்? வியட்னம் ஆல்சோ ஹாட் லைக் இண்டியா என்று அவர் மனைவி சொன்னதை ஆமோதித்தேன். இந்தியாவும் வியட்நாமும் என்பதை உடனே ’we at - நாமும்’ என இருமொழிகளில் எழுதிப்பார்த்தது மனம்.





’யூ வாண்ட் திஸ் ஸ்ப்ரே?

“எத்தையானும் தெளிச்சு விட்ராதப்பா மகராசா’ என்று மைண்ட் வாய்ஸ் அவருக்குக் கேட்காத வண்ணமாய் எண்ணியபடி, நோ நோ.. ஐ ஹவ் ஹேர் செட்டிங் ஜெல்’ என்று புளுகிவிட்டுக் கிளம்பினேன்.

அஃதல்ல விஷயம். ஊனமுற்றவர்கள் அவர்களால் செய்ய முடியாததைச் செய்ய இயலும்போதோ, சமூகமோ அரசோ அதற்குரிய வசதி வாய்ப்புகளைத் தரும்போதோ அடைகின்ற திருப்தி ஞாலத்தின் மாணப்பெரிது. அம்மா உணவகம், குடிநீர் எல்லாம் அளிக்கப்படும் இக்காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில வழிபாட்டுத் தலங்கள், பூங்கா, நதி-கடற்கரை, திரையரங்கம், துணிக்கடை என்று சில இடங்களேனும் எனக்கு வேண்டியதை நானே தேர்ந்தெடுத்தேன் என்ற நிறைவைத் தருமாறு அமைவது அவசியம். இப்போதைக்கு பள்ளிகளில் கூட அல்ல, மயானங்களுக்கு மட்டுமே இருக்கிறது சக்கர நாற்காலிகளுக்கும் அதை உபயோகிப்பவர்களுக்குமான சாவுப்பாதை.


Wednesday, April 29, 2015

Miss you even when you be with me - படக்கதை











இது ஒரு... இல்ல, ஆறு படக்கதை. படங்கள ஏன் இப்பிடி... இல்ல, ஒண்ணும் சொல்லல. புரியாதவங்க கீழ படிச்சுக்குங்க. 















என்ன பண்ற?
......

என்ன பண்றன்னு கேட்டேன்

ச்சு.. ஒண்ணுமில்ல

ஒண்ணுமில்லன்னா

சும்மா இருக்கேன்

ஏன் சும்மா இருக்க?என்ன மிஸ் பண்ணலியா

 
வெட்டியா இருக்கும் போது ஒன்ன மிஸ் பண்ணா பரவாயில்லயா

 
ஏன்?

அப்ப, வேலையா இருக்கும்போது உன்ன மிஸ் பண்ணலன்னு ஆயிடுமே

அப்பவும் பண்ணு, சும்மா இருக்கும் போதும் பண்ணு..

ஏன்...

நீ என்ன எப்பவும் மிஸ் பண்ணிகிட்டே இருக்கணும்

இருந்தா..

இருந்தா... அது சந்தோஷம்

அதுல என்ன சந்தோஷம்

அளவு எல்லாம் சொல்லாம, சொல்லவே முடியாத அளவுக்கு நீ என் மேல பிரியமா இருக்கேன்னு..

மிஸ் பண்ணனும்னா நீ இல்லாம இருக்கணும். அப்ப என்ன பண்ணட்டும். ஒனக்குபிரியமா இருக்கணுமா பிரியாம இருக்கணுமா

போடா.. எதாவது சொல்லி என்ன மயக்கற

நான் ஒண்ணும் ஒன்ன மயக்கல, மேடம் இப்ப மயங்கற மூடுல இருக்கீங்க

......
ம்ம்....

......................... :)

ஆமா.. இருக்கேன்... தெரியுதா..

தெரிஞ்சு தான சொல்றேன்

அப்புறம் ஏன் அங்க இருக்க

மிஸ் பண்ணணுமே..

வேணாம் மொத எழுத்த மாத்திக்கலாம்

..............

..........................................................

...................

மண்டு
... யு நோ வாட்?

இப்ப பேசாத..

பேசுவேன்.. யு நோ வாட்?

ஸ்... ஸ்ஸொல்லு...

I miss you even when I be with you

..
ம்ம்..சரி... தெரியுதா, நீ தான் இப்படி எதாவது சொல்லி மயக்கறன்னு

........
ம்ம்.......

.. இரு..

முடியாது பேசாதன்னு நீ தான சொன்ன

இல்ல பேசலாம்

ம்ஹூம்...

இத சொல்லு...

என்......

அது எப்பிடி நான் இருந்தாலும் என்ன மிஸ் பண்ணுவ?

நேத்து நம்ப என்ன பண்ணினோம்?

ம்முவ்வா.. சொல்ல மாட்டேன் போ..                               

சொல்லுடி..

இப்ப எதுக்கு பேச்ச மாத்தற, சொல்லு எப்பிடி நான் இருந்தாலும் என்ன யு வில் மிஸ் மீ?

அதான் சொல்றேன், சொல்லு நாம என்ன பண்ணினோம்

சினிமாக்குப் போனோம்... ... ம்மெதுவா.. வெளில சாப்பிட்டோம்..

அப்புறம்..

வீட்டுக்கு வந்தோம்

வந்து...?

<3 <3 <3

என்ன பேசினோம்?

எங்க பேசினோம்..

பேசவேயில்லல்ல.. அதான். உன் கூட இருக்கும் போதே உன்ன மிஸ் பண்றது.

என்ன ஒளர்ற.. ஒண்ணும் புரில

புரிலயா, நான் ஒளர்றனா?

சரி. புரில.

இப்ப உன் கூட இருக்கேன்; உன்னோட தான் இருக்கேன். ஆனா, நேத்துப் பேசாம இருந்த ஒன்ன மிஸ் பண்றேன்.. புரியுதா?

....
     .......

            .
            .
            .
            .
            .

         டேய்.